இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.
இந்த சீசனில் வெகு சீக்கிரத்தில் போட்டியாளர்களுக்கிடையே போட்டியும், மோதலும் உருவாகிவிட்டது. இதில், அனன்யா பாண்டே எலிமினேட் செய்யப்பட்டார். பவா செல்லத்துரை போட்டியில் இருந்து விலகிவிட்டார்.
முன்னதாக, 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்ற நிலையில், தற்போது 15 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே இருக்கிறார்கள். இதனால், இந்த வாரம் கண்டிப்பாக ஒரு வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்கும் என ரசிகர்கள் எண்ணிய நிலையில் கமல் அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.
ஒரு வைல்ட் கார்டு என்டரி கிடையாதாம். மொத்தம் 5 புதிய போட்டியாளர்களை வைல்ட் கார்டு என்ட்ரியாக வீட்டிற்குள் அனுப்பிவைக்க உள்ளதாக கமல் ஹாசன் கூறியுள்ளார். வருகிற ஞாயற்று கிழமை 29ஆம் தேதி இது நடக்கவிருக்கிறது என்றும் ப்ரோமோ வீடியோவில் கமல் தெரிவித்துள்ளார்.
அவர் நம் அனைவருக்கும் மிகவும் பரிட்சயமான ஒரே கண்ணால என்ன ஓரங்கட்டுரா புகழ் கானா பாலா என்றும், ரக்ஷிதாவின் கணவர் தினேஷ், ராஜா ராணிபிரபலம் அர்ச்சனா, பாரதிகண்ணம்மா நடிகர் அருண், ஸ்ரீதேவி விஜயகுமார் என 5 பேர் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே அனுப்பப்போகிறார்கள் என்ற தகவல் இணையத்தில் வைரலாக பரவி மக்களை அலெர்ட் மோடிலேயே வைத்துள்ளது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.