சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று கூறி இமான் கூறிய விஷயம் சமூக வலைதளங்களில் பெரிதுமாக பேசப்பட்டது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் தற்போது சிவகார்த்திகேயன் குறித்து மேலும் ஒரு விஷயம் வைரலாகி வருகிறது. அதாவது சிவகார்த்திகேயனுடன் அதிக அளவில் கிசுகிசுக்கப்பட்டு வந்த 6 நடிகைகள் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, சிவகார்த்திகேயன் இந்த விஷயங்களை அப்படியே மூடி மறைத்த நிலையில் தற்போது இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அதன்படி அஞ்சலி, பிந்து மாதவி, ஓவியா, கீர்த்தி சுரேஷ், ஸ்ரீ திவ்யா, பிரியங்கா மோகன் உள்ளிட்ட நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு இருந்தார்.
இதில், சில நடிகைகளுடன் அவர் அடுத்தடுத்த படங்களில் நடித்தது முக்கிய காரணமாக பேசப்பட்டது. ஆனால், இதில் அஞ்சலியின் பெயர் இருப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது. ஜெய்யுடன் டேட்டிங் செய்து திருமணம் வரை சென்றார் என்று கூறப்பட்டுள்ள நிலையில், சிவகார்த்திகேயன் எப்போது இந்த லிஸ்டில் வந்தார் என்ற கேள்வி அனைவருக்கும் தோன்றலாம். ஆனால், ஆரம்ப காலகட்டத்தில் இவர்கள் இருவரும் ஒரே ஓட்டலில் தாங்க பல பத்திரிகைகளில் முணுமுணுக்கப்பட்டது.
இருவரையும் ஹோட்டலில் பார்த்த ஒருவர் வெளிப்படையாக போட்டு உடைத்து பரபரப்பையும் கிளப்பினார். ஆனால், சோசியல் மீடியா பெரிய அளவில் அந்த சமயத்தில் இல்லாத காரணத்தால் அது அப்படியே அமுக்கி மூடி விடப்பட்டது. அதைத் தொடர்ந்து பிந்து மாதவியுடனும் இவர் சேர்த்து வைத்து பேசப்பட்டார்.
மேலும் அவருடைய முதல் ஹீரோயின் ஓவியாவும் இந்த லிஸ்டில் இருக்கிறார். ஆனால், அந்த நட்பு நீண்ட நாட்களாக நீடிக்கவில்லையாம். ஸ்ரீதிவ்யா, கீர்த்தி சுரேஷ், பிரியங்கா மோகன் ஆகியோருடன் இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்தது பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது.
இந்த விஷயங்கள் எல்லாம் வெளியாக்காமல் இருக்க அப்போதிலிருந்து சிவகார்த்திகேயன் காசை தண்ணியாக வாரி இறைத்த கதை இப்போது மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் கமுக்கமாக செய்து வந்த சிவகார்த்திகேயனின் மானம் இப்போது இமான் மூலமாக காற்றில் பறந்து வருகிறது.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.