தற்போது கோலிவுட்டில் நயன்தாரா தனுஷ் பிரச்சனை காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
நயன்தாரா–விக்னேஷ் சிவனின் ஆவணப்படம்,தாமதமாக வெளியாக தனுஷ் தான் காரணம் என மூன்று பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகை நயன்தாரா.முன்னதாக தனுஷ் என்னுடைய அனுமதி இல்லாமல் நானும் ரவுடி தான் பட கிளிப் பயன்படுத்தியதற்காக 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.
இதனால் ரசிகர்கள்,திரையுலகினர் மாத்தி மாத்தி தங்களுடைய ஆதவரை தெரிவித்து வருகின்றனர்.இந்த பிரச்சனை 9 வருடத்திற்கு முன்னதாகவே ஆரம்பித்து இருக்கிறது.
2016 ஆம் ஆண்டு நடந்த 63 வது பிலிம்பேர் விருது விழாவில் தமிழ்,மலையாளம்,கன்னடம்,தெலுங்கு என பல திரையுலகினர் கலந்து கொண்டனர்.இதில் தமிழில் சிறந்த படத்துக்கான விருதை தனுஷ் தயாரிப்பில் வெளியான காக்கா முட்டை பெற்றது.
இப்படத்திற்கான விருதை தனுஷ் கையில் வாங்கியவுடன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷை புகழ்ந்து பேசி படக்குழு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.ஆனால் அவர் தயாரிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படமும் நாமினேஷனில் பல விருதுகளை வாங்கியது.அதைப்பற்றி தனுஷ் எதுவும் பேசாமல் இறங்கினார்.
சிறிது நேரத்தில் சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாரா நானும் ரவுடி தான் படத்திற்காக பெற்றார்.விருதை வாங்கியவுடன் படத்தின் குழுவினர்,சக நடிகர் நடிகைகளுக்கு நன்றி சொல்லிய பிறகு தயரிப்பாளர் தனுசுக்கு மட்டும் சாரி சொல்லினார். சாரி சொல்லிவிட்டு,தனுஷ் நானும் ரவுடி தான் திரைப்படத்தை பற்றி எதுவும் பேசவில்லை ஒரு வேளை என் நடிப்பு அவருக்கு பிடிக்கவில்லை போல என்று தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல்,இந்த விருதை இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு அர்ப்பணிப்பதாக சொல்லி மேடையை விட்டு இறங்கினார்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.