தமிழ் திரையுலகில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக பார்க்கப்பட கூடியவர் அஜித். இவரின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பு ஹைதராபாத் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விடாமுயற்சி படத்தில் அஜித் நடித்துக் கொண்டு இருப்பதை அறிந்த எஸ் ஜே சூர்யா நேரடியாக படத்தின் செட்டிற்கு சென்று அஜித்தை சந்தித்து பேசியுள்ளார்.
மேலும், அவருடன் புகைப்படமும் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை மிகவும் நீண்ட வருடங்களுக்கு பின் எனது வழிகாட்டி தலைசிறந்த அஜித்குமார் சாரை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என கேப்சன் போட்டு பதிவிட்டுள்ளார். மேலும், அந்த புகைப்படத்தில் எஸ் ஜே சூர்யா மிகவும் மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.
படப்பிடிப்பிற்கு மத்தியில் இந்த போட்டோ எடுக்கப்பட்டுள்ளது. அஜித்குமார் கையில் ரத்தக்கரை உள்ளது. சண்டை காட்சிக்கு மத்தியில், இந்த சந்திப்பு நடைபெற்று இருக்கும் போல் தெரிகின்றது. தெலுங்கு சினிமாக்களிலும் எஸ்ஜே சூர்யா நடித்து வருகின்றார். மேலும், சங்கரின் கேம் சேஞ்சர் படத்திலும் நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப் பிடிப்பில் கலந்து கொண்ட போது எஸ் ஜே சூர்யா அஜித்தை சந்திக்க சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் எஸ்.ஜே. சூர்யா தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக முக்கிய காரணம் அஜித்தான் என அவரே பல மேடைகளில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
This website uses cookies.