சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி பங்காரம்” என்ற திரைப்படத்தில் நடித்து வரும் சமந்தா, “சுபம்” என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று சமந்தா தனது 38 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் ஒரு படி மேலே சென்று சமந்தாவுக்கு ஒரு கோயிலையே கட்டியுள்ளார்.
ஆந்திரா மாநிலத்தின் பாபட்லா மாவட்டத்தில் அமைந்துள்ள அலபாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் என்ற நபர் சமந்தாவுக்கு ஒரு சிலையை நிறுவி ஒரு கோயிலையும் எழுப்பியுள்ளார். சமந்தா செய்யும் சமூக சேவைகள் தனக்கு பிடிக்கும் என்பதால் அவரது ரசிகராக மாறிவிட்டதாக கூறும் சந்தீப் ஒவ்வொரு ஆண்டும் சமந்தாவின் பிறந்தாநாள் அன்று ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அன்னதானம் செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
“பிரத்யுஷா சப்போர்ட்” என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் சமந்தா, பல பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சுகாதார பராமரிப்புகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
This website uses cookies.