நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் ஆக தளபதி 69 திரைப்படம் உருவாகிறது. இந்த திரைப்படத்தை அஜித்தின் மாஸ்த்தான இயக்குனர்களில் ஒருவரான எச் வினோத் தான் இயக்குகிறார். இப்திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார் .
இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பீஸ்ட் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய் உடன் சேர்ந்து பூஜா ஹெக்டே நடிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் பாபி தியோல் மற்றும் இயக்குனரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் கமிட் ஆகி நடிக்க உள்ளனர். இந்த திரைப்படங்களின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வந்த நிலையில் தற்போது இப்படத்தின் அடுத்த கட்ட வேலைகள் மும்முரமாக தொடங்கி இருக்கிறது.
ஆம், படத்தின் பூஜை இன்று மிகவும் பிரம்மாண்டமாக போடப்பட்டிருக்கிறது. இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனம் தளபதி 69 படத்தின் மீது விழுந்துள்ளது. கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் வேலைகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது.
இன்றைய தினம் பூஜை முடிந்துள்ள நிலையில் நாளை இந்த படத்தின் சூட்டிங் சென்னையில் மிக பிரம்மாண்டமான செட்டில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. முதலில் பாடல் காட்சி படமாக்க இருப்பதாகவும் அதன் பிறகு படத்தின் காட்சிகள் படமாக்கப்படும் எனும் கூறப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது ஒரு தகவல் கிடைத்திருக்கிறது அதாவது நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் சார்பில் நடத்தப்படும் மாநாடு பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்ற நிலையில் அதில் பங்கேற்காத விஜய் தன்னுடைய கடைசி படமான தளபதி 69 படத்தின் பூஜையில் பங்கேற்றிருக்கிறார் .
இதையும் படியுங்கள்: பூஜையுடன் துவங்கிய தளபதி 69 படப்பிடிப்பு – வைரலாகும் போட்டோஸ்!
இதனால் கட்சி பூஜை ஆப்சன் போட்ட நடிகர் விஜய் தன்னுடைய கடைசி பட பூஜையில் ப்ரெசென்ட் போட்டு இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த கேள்விப்பட்ட ரசிகர்கள் ஆமாம்… என்னதான் இருந்தாலும் சோறு போட்ட முதல் தெய்வம் அவருக்கு சினிமா தானே? அந்த நன்றி மறப்பாரா?அதனால் தான் முதலில் படத்தின் பூஜைக்கு அவர் கவனத்தை செலுத்தி இருக்கிறார் என கூறி வருகிறார்கள்.
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
This website uses cookies.