தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் பட்டியலில் இருப்பவர் அஜித். இவருக்கு உலக அளவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். எனவே இவர், எந்த தகவலை வெளியிட்டாலும் அதனை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
சமீப காலமாக ரசிகர்களுக்கு கருத்து கூறும் வகையில் ஏதேனும் தகவல்களை வெளியிட்டு வரும் அஜித் இந்த முறை வெளியிட்டுள்ள அறிக்கை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அஜித் எந்த ஒரு சமூக வலைதளத்திலும் இல்லாததால், ரசிகர்களுக்கு சொல்ல வேண்டிய விஷயங்களை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம்தான் தெரிவித்து வருகிறார். அந்த வகையில் இந்த தகவலையும் சுரேஷ் சந்திரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது, உங்களை சுற்றி நெகட்டிவிட்டியோ.. டிராமாவோ.. இல்லாத நபர்களை வைத்துக் கொள்ளுங்கள். ஊக்கப்படுத்த கூடிய இலக்கை நிர்ணயித்து கொள்ளுங்கள். பொறாமைக்கோ.. வெறுப்புக்கோ.. நேரமில்லை. உங்களது சிறப்பான பணியை மட்டும் கைவிடாதீர்கள் என அஜித் கூறியுள்ளார்.
இந்த அறிக்கை தற்போது அஜித் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. அஜித் தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ படத்தில் நடித்துள்ளார்.
வங்கி கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை தொடர்ந்து அஜித், நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தன்னுடைய அடுத்த படத்தை நடிப்பார் என கூறப்பட்ட நிலையில், தற்போது அஜித் மீண்டும் பைக் பயணத்தை தொடர முடிவு செய்துள்ளதாக கூறப்படுவதால், இந்த படத்தின் படப்பிடிப்பு… சற்று தாமதமாக தொடங்க வாய்ப்புள்ளது. எனினும் விரைவில் அஜித்தின் அடுத்ததாக என்ன முடிவு செய்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.