விஜய் டிவியில் ரெட்டைவால் குருவி தொடரின் மூலம் அறிமுகி அதன்பிறகு சில படங்களிலும், ஆல்பம் சாங்களிலும் நடித்தவர் தான் அஸ்வின். ஆனால் அஸ்வினுக்கு பெரிய அளவில் எங்கும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. எனவே மீண்டும் விஜய் டிவிக்கு வந்து குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பால் அஸ்வினுக்கு படவாய்ப்பு வரத்தொடங்கியது.
அஸ்வின் நடித்த “என்ன சொல்ல போகிறாய்” படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது இதுவரை 40க்கும் மேற்பட்ட கதைகள் கேட்டுள்ளேன், கதை கேட்கும் போதே பிடிக்கவில்லையென்றால் தூங்கி விடுவேன் என்ற அஸ்வினின் ஆணவப் பேச்சுக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இதனையடுத்து அவர் நடித்த என்ன சொல்லப் போகிறாய் படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியானது. 40 கதை கேட்ட அஸ்வின் இந்தக் கதைக்கும் தூங்கி இருக்கலாம் என ரசிகர்கள் இணையத்தில் வறுத்தெடுத்தனர்.
என்ன சொல்லப் போகிறாய் படத்தின் தோல்விக்கு அஸ்வினுடைய ஆணவப் பேச்சு தான் காரணம் என படக்குழு, தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட அஸ்வினிடம் சொல்லியுள்ளார்கள். ஆனால் அஸ்வின் என்னால் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என மறுத்து விட்டாராம். இதனால் அஸ்வின் மேல் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் படக்குழுவினர் கோபத்தில் உள்ளார்களாம். இருந்தாலும் அஸ்வினுக்கு இவ்வளவு ஆணவம் இருக்கக்கூடாதுப்பா..
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.