தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக, நடிகர் பாலா தனது முன்னாள் மனைவிகள் மீது கொச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
திருவனந்தபுரம்: தமிழ் சினிமாவில் அன்பு, காதல் கிசு கிசு உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர் பாலா. பின்னர், மலையாளத்தில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகராக வலம் வருகிறார். இதனிடையே, மீண்டும் தமிழில் வீரம் படத்தில் அஜித்குமாரின் தம்பியாக நடித்து தமிழ் ரசிகர்களிடமும் கவனம் பெற்றார்.
மேலும் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திலும் நடித்திருந்தார். இவர் இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி ஆவார். மேலும், கடந்த 2023ஆம் ஆண்டு கல்லீரல் தொடர்பான பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், பாலா தற்போது தனது 4வது மனைவி கோகிலாவுடன் கொச்சியில் இருக்கும் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்று புகார் அளித்துள்ளார்.
அதில், தனது முன்னாள் மனைவிகள் அம்ருதா மற்றும் எலிசபெத் ஆகியோர் மீது புகார் கொடுத்திருக்கிறார். மேலும், தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாக புகாரில் குறிப்பிட்டுள்ள பாலா, அஜு அலெக்ஸ் என்ற யூடியூபர் தொடர்ந்து தன்னைப் பற்றிய தரக்குறைவான செய்திகளை வெளியிட்டு வருவதுடன், தன்னிடம் லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இரண்டு துண்டான உடல்.. பதுங்கியிருந்த கும்பல்.. லிவ் இன் வாழ்க்கை முடிவுக்கு வந்தது எப்படி?
முன்னதாக, 2016ஆம் ஆண்டு அம்ருதா என்ற பாடகியை திருமணம் செய்துகொண்டார் பாலா. ஆனால், அது விவாகரத்தில் முடிந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு மருத்துவர் எலிசபெத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குள்ளும் பிரச்னை ஏற்பட்டது. இந்த நிலையில், 4வதாக தனது தாய்மாமன் மகள் கோகிலா என்பவரை பாலா திருமணம் செய்துகொண்டார்.
வெற்றிகரமாக 25 வது நாள் பிரதீப் ரங்கநாதன்,அனுபமா பரமேஸ்வரன்,கயாடு லோகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ‘டிராகன்’ திரைப்படம்,அஸ்வத் மாரிமுத்து…
அடுத்த ஆண்டு மார்ச் 18ம் தேதி என்னுடைய பிறந்த நாள் அன்று பதில் சொல்வேன் என அதிமுக உடன் கூட்டணி…
கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு! ரஜினிகாந்த் நடிப்பில்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு…
தவெக - பாஜக அண்ணாமலை மோதல் நேற்று பூதாகரமாக வெடித்த நிலையில், அதிமுகவின் காயத்ரி ரகுராம் விஜய்க்கு ஆதரவாக கருத்து…
நடிகை சமந்தா சினிமாவில் அறிமுகமான பின் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து முன்னணி நடிகையானார். நடிக்கும் போதே நாகசைதன்யாவுடன் காதல்…
This website uses cookies.