கோவை சரளாவை ஆசை காட்டி மோசம் செய்த உச்ச நடிகர்.. பல வருடங்கள் கழித்து சொன்ன இயக்குனர்..!
Author: Vignesh17 April 2024, 6:39 pm
நடிகை கோவை சரளா தமிழ் படங்களில் துணை வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர். இதுவரை 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ‘சிறையில் பூத்த சின்ன மலர்’ மற்றும் ‘வில்லு’ படங்களில் பாடகியாகவும், ‘உழைத்து வாழ வேண்டும்’ என்ற படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ மற்றும் ‘ஒரி நீ பிரேம பங்கரம் கனு’ என்ற படங்களில் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான ‘நந்தி விருதையும்’ பெற்றுள்ளார்.

மேலும் படிக்க: சார் விட்டுருங்கன்னு சொன்னால்.. புலம்பித்தள்ளிய முத்தழகு சீரியல் நடிகை..!
நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் தொலைக்காட்சியில் தனது திறமையை நிருபித்துயுள்ளார். அவரது ‘என்ன இங்க சத்தம்’, ‘என்னை ஜப்பான்ல கூப்பிட்டாகோ’, ‘சிநேகிதனய்ய் சிநேகிதனய்ய் ர்ர்ரகசிய சிநேகிதனய்ய்’, ‘தொறை இங்க்லீஸ் எல்லாம் பேசுது’ போன்ற வசனங்கள் இன்று பிரபலம். திரையுலகில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் சென்னைக்கு வந்த அவருக்கு, ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க செய்து அறிமுகம் செய்து வைத்தார் பாக்கியராஜ்.

கோவை சரளா இன்று வரை யாரையுமே திருமணம் செய்து கொள்ளவில்லை. பரந்த உள்ளமும் இறக்க குணமும் நிறைந்தவர். தனது உடன்பிறந்தவர்களின் பிள்ளைகளைத் தன் பிள்ளைகளாக நினைத்து அவர்களைக் கண்டிப்போடு வளர்த்து வருகிறார். பல ஏழைக்குழந்தைகளை படிக்க வைத்து வருகிறாராம் கோவை சரளா. முதியோர் இல்லங்களுக்கும் அடிக்கடி சென்று உதவிகளும் செய்து வருகிறாராம்.
மேலும் படிக்க: கோபிகாவா இது? எலும்பும் தோலுமாக ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறிட்டாரே..!
மனோரமாவிற்கு அடுத்தபடியாக ஒரு தலைச்சிறந்த நகைச்சுவையாளினியாகத் திகழும் கோவை சரளா தென்னிந்தியத் திரையுலகிற்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் என்று சொன்னால் அது மிகையாகாது. 25 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் இருந்து வரும் அவரது இடத்தை இனி எந்தவொரு நகைச்சுவை நடிகையும் ஈடு செய்ய முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.
இந்நிலையில், 58 வயதை கடந்த நிலையில் கோவை சரளா திருமணம் செய்யாமல் ஒண்டிக்கட்டையாகவே இருந்து வருகிறார். இவரது குடும்பத்தின் மூத்த மகளான கோவை சரளா, உடன் பிறந்த நான்கு சகோதரிகளின் திருமணத்திற்கு உதவி செய்துள்ளார். மேலும், அவர்களின் குழந்தைகளின் கல்வி உட்பட அனைத்து தேவைகளையும் கோவை சரளாதான் கவனித்துக் கொண்டார். மற்றவர்களுக்கு உதவுவதற்காக தனது வாழ்நாளை செலவிட விரும்புவதாக கோவை சரளா தெரிவித்து இருந்தார்.
மேலும் படிக்க: அடச்சே.. விவாகரத்து நாடகம் நடத்தும் தனுஷ் – ஐஸ்வர்யா.. ஓ விஷயம் அப்படி போகுதா..!
இந்நிலையில், இதுவரை கோவை சரளா திருமணம் செய்யாமல் இருப்பது குறித்து அவருடன் பணிபுரிந்த இயக்குனர் வி சேகர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதாவது, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, வரவு எட்டணா செலவு பத்தணா, விரலுக்கேத்த வீக்கம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய வெற்றி இயக்குனர் வி சேகர் அப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமே வடிவேலு மற்றும் கோவை சரளாதான் இருவரின் கெமிஸ்ட்ரி அந்த காலகட்டத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில், சில காரணங்களால் இருவரும் சேர்ந்து நடிக்கவே இல்லை.
மேலும் படிக்க: பட வாய்ப்பிற்காக அதை கட்டுப்படுத்திக்கிட்டு இருக்கேன்.. ரகசியத்தை உடைத்த சினேகா..!
அதற்கு காரணம், இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனக்கசப்புதான் ஆரம்பத்தில் வடிவேலுவுடன் நடிக்க சம்மதிக்காமல் இருந்தார் கோவை சரளா. பின்னர், சம்மதம் தெரிவித்தாலும், கட்டிப்பிடிக்க கூடாது, தொடக்கூடாது என சில வசனங்கள் பேசக்கூடாது என்று கண்டிசன் போட்டு நடித்தார் கோவை சரளா. ஆனால், காலம் போக இருவருக்கும் இடையே புரிதல் ஏற்பட்ட இந்த நட்பு காதலாக மாறியது. இருவரும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்ததாக இயக்குனர் வி சேகர் தெரிவித்து இருக்கிறார். ஆனால், சில காரணங்களால் அது நடக்காமலே போய்விட்டதால் வெறுத்து போன கோவை சரளா இதனால், இருவரும் இணைந்து நடிப்பதையே நிறுத்தி விட்டார்கள். அதன் பின்னர் திருமணமே வேண்டாம் என்று கோவை சரளா அதை ஒதுக்கி விட்டார் என்று வி சேகர் தெரிவித்துள்ளார்.