நடிகர், தொகுப்பாளர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முக கலைஞராக திரையுலகில் வலம் வந்தவர் சக்கரவர்த்தி. சிறு சிறு கதாபாத்திரங்களில் திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்துள்ள சக்கரவர்த்தி, டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார். தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்படும் இவர், இடுப்புக்கு மேலே ஆணாகவும், இடுப்புக்கு கீழே பெண்ணாகவும் வாழ்ந்து வருகிறார்.
அதாவது, பொதுவாக லட்சத்தில் கோடியில் ஒருவருக்கு வரக்கூடிய அரிதான பிரச்னையாக ஒரே உடலில் ஆணாகவும் – பெண்ணாகவும் வாழ்ந்து வருகிறார் சக்கரவர்த்தி. இதனால் தாம் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். தமிழக அரசால் இடை பாலினத்தவர் என்ற சான்றிதழை பெற்றுள்ளார் சக்கரவர்த்தி. சக்கரவர்த்திக்கு பத்து வயது இருக்கும் போது, அவருடைய அந்தரங்க உறுப்பில் இருந்து ரத்தம் கசிந்துள்ளது.
இதனால் பயந்துபோன அவர், இது குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். காயம் ஏற்பட்டதால் இப்படி நடந்திருக்கலாம் என அவரும் இதனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால், மாத மாதம் இவருக்கு இந்த பிரச்சனை தொடரவே, மருத்துவமனைக்கு சென்று சக்கரவர்த்தியை பரிசோதனை செய்துள்ளனர். அப்போது மருத்துவர்கள் கூறிய விஷயம் இவர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படும் அரிதான பிரச்சனையால் சக்கரவர்த்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ஆணாக இருந்தாலும் அவருக்கு கர்ப்பப்பை உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு ஆண்மகனின் பருவ வயது மாற்றங்களும் இவருக்கு ஏற்பட்டுள்ளது. அதாவது, பொதுவான ஆண்களை போல விந்துவும் வெளியாகி அதன் உணர்வுகளும் உள்ளது, பெண்களுக்கு இருப்பது போல் கர்ப்பப்பையும் மாதவிடாய் பிரச்னைகளும் உள்ளது.
இவர் திருமண வயதை எட்டியபோது, ஆண் – பெண் என இவருக்கான உணர்வுகளோடு இடை பாலினமாக இருந்ததால், இவரின் பெற்றோர் திருமணம் செய்து வைக்க மறுத்துவிட்டனர். மேலும் மாதவிடாய் மற்றும் சிறுநீர் பிரச்சனைகள் ஆகியவை கொண்டதால், தீவிர நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சக்ரவர்த்தி வலியால் துடித்துள்ளார். பின்னர் மருத்துவர்கள் அறிவுரையினால் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயம் இருந்ததால், ஆணுறுப்பையும் ஆபரேஷன் செய்து நீக்கிவிட்டார்களாம். தன்னை போல இடை பாலினமாக பிறந்து, பிரச்சனைகளை அனுபவித்து வருபவர்களுக்கு, ஆதரவாக பல்வேறு சமூக விழிப்புணர்வு வீடியோக்களை போட்டு வருகிறார் .
இவரை பற்றி தகவல் தெரிந்தவுடன் பலர் வாய்ப்பு தர மறுப்பதாகவும், இதனால் வறுமையில் வாடி வருவதாகவும் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இவருடைய நிலையை அறிந்த ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென புகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளம் ஒன்றுக்கு பிரமேலதா…
சர்ச்சையை கிளப்பிய வீடியோ “சிறகடிக்க ஆசை” என்ற பிரபலமான டிவி தொடரில் வித்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக…
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யா பின்னாளில் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகர்ஜூனாவின்…
துருவ் விக்ரம் - அனுபமா ஜோடி… மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் “பைசன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம்…
திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது மக்கள நீதி மையம். இக்கட்சியின் தலைவராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். கடந்த மக்களவை…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதிக்கு அருகேயுள்ள அரிச்சல்பட்டிஎன்ற ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த தம்பான்…
This website uses cookies.