தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக பயணித்து 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகர் டெல்லி கணேஷ் நேற்று அவரது இல்லத்தில் உடல் நிலை சரியில்லாமல் காலம் ஆனார்.
இவர் 1976 ஆம் ஆண்டு வெளியான “பட்டினபிரவேஷம்” படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார்.காமெடி, குணச்சித்திரம், வில்லன் என தன்னுடைய இறுதி மூச்சு வரை பன்முக நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்தார்.
இவருக்கு சரியான அங்கீகாரம் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை என பலரும் வேதனைப்பட்டது உண்டு. இதை அவரே ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் மனம் விட்டு சொல்லி இருப்பார்.
ஒரு தனியார் நிறுவனம் நடத்திய விருது வழங்கும் விழாவில் டெல்லி கணேஷுக்கு நகைச்சுவை நடிப்புக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
அப்போது பேசிய டெல்லி கணேஷ் என்னைப் போன்ற குணச்சித்திர நடிகர்களை தமிழ் சினிமாவில் யாரும் பெரிதாக மதிப்பதில்லை. மற்ற மொழி மாநிலங்களில் குணச்சித்திர நடிகர்களுக்கு பெரிய மரியாதை கொடுக்கின்றனர் . ஆனால் இங்கே எங்களுக்கு விருதும் கொடுப்பதில்லை, ஒரு விழாவிற்கும் அழைப்பதில்லை.
இதையும் படியுங்க: கதையை திருடிய கமல் ஹாசன்.. ஹிட் ஆன திரைப்படம்…!
சினிமாவில் ஏதாவது விழா நடந்தால் கூட டிவியில் பார்த்து தான் தெரிந்து கொள்கிறேன். ஏனென்றால் யாரும் என்னை எந்த விழாவிற்கும் கூப்பிடுவதில்லை.. எனக்கு கிடைத்த முதல் விருது இதுதான். இதுவே கடைசி விருதாக இருக்கட்டும் .இனி யார் விருது கொடுத்தாலும் வாங்க மாட்டேன்.யார் எந்த விழாவுக்கு அழைத்தாலும் போக மாட்டேன்’ என ஆதங்கத்துடன் பேசி இருப்பார்.
1979-ம் ஆண்டு பசி திரைப்படத்திற்காக “தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருது டெல்லி கணேஷுக்கு வழங்கப்பட்டது . அதன்பின் 1993 – 1994ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில அரசின் “கலைமாமணி விருது“ம் டெல்லி கணேஷ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் அவருக்கு எந்த உயரிய விருதும் கிடைக்கவில்லை.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.