ரஜினியிடம் இப்படியொரு குணம் இருக்கா: ரூ.150 கோடியில் தனுஷ் வீடுகட்டியதற்கான காரணம் இதுதானா..?

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். இவரது மூத்த மகள் தான் ஐஸ்வர்யா. 2006ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்த ஐஸ்வர்யாவுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்தார்.

தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் தனுஷ் ரூ.150 கோடி செலவில் போயஸ் கார்டனில் பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். இதன் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டும் வருகிறது. ரஜினிகாந்த் வசித்து வரும் அதே போயஸ் கார்டனில் தனுஷ் திடீரென இத்தனை கோடிகள் செலவு செய்து வீடு கட்டியதற்கு காரணம் என்ன என்று பலரின் மத்தியில் கேள்வி எழுந்தது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய முன்னாள் மருமகனான தனுஷின் தந்தை மற்றும் தாய் இருவரையும் இரண்டாம் தரத்தில் வைத்து நடத்தியது தான் இந்த திடீர் முடிவிற்கான காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக, ரஜினிகாந்த் மீது தனுஷுக்கு சில வருத்தங்கள் உண்டானதாகவும் சொல்லப்படுகிறது.

எல்லா பேட்டிகளிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் தவறாது தனது பெற்றோர் குறித்து புகழ்ந்தும் நெகிழ்ந்து பேசும் தனுஷ், ரஜினிகாந்திற்கு இணையாக அதே இடத்தில வீடு கட்டவேண்டும் என்று முடிவு செய்து தான் இந்த பிரம்மாண்ட வீட்டை கட்டியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

UpdateNews360 Rajesh

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

8 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

9 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

10 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

10 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

11 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

11 hours ago

This website uses cookies.