தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் மற்றும் நித்தியா மேனன் நடிப்பில் காதல் மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படமாக வெளியானது திருச்சிற்றம்பலம். இந்த படம் 2022 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தை மித்ரன் ஆர் ஜவகர் எழுதியிருந்தார்.
மேலும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த திரைப்படத்தில், தனுசுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். அதை தொடர்ந்து, அந்த படத்தில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ராசி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தன் உயிர் தோழியை காதலித்து தனுஷ் இந்த படத்தில் திருமணம் செய்து கொள்வார். இந்த படம் வாழ்க்கையுடன் இணைவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல ரீச் கிடைத்தது என்றே சொல்லலாம். மேலும், இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் பட்டித் தொட்டி எங்கும் சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக, நித்யா மேனனை குறிப்பிட்டு தாய் கிழவி என வரும் கலாட்டாவான நகைச்சுவை பாடல் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து, தற்போது திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிலிம் பேர் விருதுகள் கிடைத்துள்ளது. அது குறித்து நடிகர் தனுஷ் ஒரு நெகழ்ச்சி பதிவினை தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அதில், ஒரு படத்திற்காக ஹீரோவும் ஹீரோயினும் இணைந்து ஒரே நேரத்தில் சிறந்த நடிகர் நடிகைக்கான விருதை பெறுவது என்பது பெரிய விஷயம் எனவும், திருவும் சோபனாவும் ரொம்ப ஸ்பெஷல் என்றும் திருவை அழகாக காட்டியதற்கு மிகவும் நன்றி ஷோபனா என்று அந்த பதிவில் நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.