ஆண்டியால் பறிபோன வாய்ப்பு..நடிகர் கரண் வீழ்ந்தது எப்படி…பிரபலம் சொன்ன அந்த தகவல்.!
Author: Selvan13 February 2025, 1:18 pm
கரண் சினிமாவில் சரிந்தது எப்படி
நடிகர் கரண் தமிழ் சினிமாவில் எதனால் ஓரம்கட்டப்பட்டார் என்பதை மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
1967 ஆம் ஆண்டு பிறந்த நடிகர் கரண்,ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து தன்னுடைய சினிமா கரியரை ஆரம்பித்தார்.
இதையும் படியுங்க: ’அரைகுறை ஆடை அணியும் பெண்கள்’.. முக்கிய சினிமா பிரபலம் சர்ச்சை கருத்து!
தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாமலை படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருப்பார், அதன் பிறகு கமலின் நம்மவர் படத்தில் வில்லனாக நடித்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார்.அதனைத்தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடிக்க வாய்ப்புக்கு கிடைத்தது,பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த சேது திரைப்படத்தில் முதலில் இவர் நடிக்க இருந்த நிலையில, சில காரணங்களால் அதில் நடிக்க முடியாமல் போனது என அவரே தெரிவித்திருப்பார்.
அதன் பிறகு கொக்கி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.அப்போது அவருக்கு மேனேஜராக ஆண்டி வயதில் ஒரு பெண்மணி இருந்தார்,கரணின் கால் ஷூட்,சம்பளம் போன்றவற்றை இவர் தான் கவனித்து கொண்டிருந்தார்,அப்போது இந்த ஆண்டியும் கரனும் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருந்து வந்ததாக சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டது.
இதனால் நடிகர் கரண் குடும்பத்தில் இருந்து,அந்த பெண்மணிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது,அவர் இருந்த வரை கரணின் சினிமா சார்ந்த விசயங்களை அந்த பெண்மணி பக்காவாக கவனித்து கொண்டிருந்தார்.ஆனால் சில தயாரிப்பாளர்களிடன் அந்த லேடி ரொம்ப குடைச்சல் கொடுத்து வந்ததால்,அந்த காலகட்டத்தில் பல தயாரிப்பாளர்கள் கரணை நடிக்க வைக்க தயங்கினார்கள்.
நடிகர் கரண் சார்ந்த தனிப்பட்ட விசயங்கள் முழுவதையும் அந்த லேடி கையில் இருந்ததால்,அவர் சினிமா வாழ்க்கையில் பெரிதாக முன்னேறவில்லை என அந்த பேட்டியில் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.