தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடித்த பெரும்பாலான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. அதோடு, வசூல் ரீதியாகவும் தயாரிப்பாளர்களுக்கு நல்ல இலாபத்தையும் பெற்றுக் கொடுத்தது.
அண்மையில் அவர் நடித்து வெளியான சூரரைப் போற்று பல்வேறு விருதுகளை வென்று அசத்தியது. அதேபோல, ஜெய் பீம் படமும் சக்கை போடு போட்டது. இதுபோன்ற வெற்றி படங்களில் சூர்யாவின் திரை பயணத்தில் மைல்கல்லாக அமைந்தது.
தற்போது நடிகர் சூர்யா, வாடிவாசல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரின் தந்தை சிவக்குமார், இவரது மனைவி ஜோதிகா மற்றும் இவரின் தம்பி கார்த்தி என அனைவரும் திரையுலகில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனவர்கள் தான்.
இதனிடையே, நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி, தன் அண்ணன் குறித்து பேட்டி ஒன்றில் ஒரு சுவாரஸ்யமான கருத்தை கூறியுள்ளார்.
அதில் அவர், சூர்யா இதற்கு முன் நடித்த ஏழாம் அறிவு, வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் 6 pack வைத்து கொண்டு உடலை கட்டுடன் நடித்திருப்பார் என்றும், இதைப் பார்த்து ஏங்காத, பெண்களே இல்லை எனவும், அந்த வகையில், பொது நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்த, நடிகர் கார்த்தியை பொதுமக்கள் சிலர் ரவுண்டு கட்டி விட்டதாகவும், அப்போது ரசிகர்கள் சிலர் அன்புடன் வார்னிங் செய்ததாகவும், தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் கார்த்திக்கிடம் ரசிகர்கள் கூறியதாவது:- உங்க அண்ணன் சூர்யா வால எங்க வாழ்க்கையே போச்சு என்றும், எங்க வீட்டில் எல்லாரும் சூர்யா மாதிரி சிக்ஸ் பேக் வைக்க சொல்றாங்க எனவும், உங்க அண்ணன் இப்படி செய்யறது நியாயமா? எனக் காமெடியாக தெரிவித்ததாக நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
அது மட்டும் இல்லாமல் நீங்களும் உங்க அண்ணன் மாதிரி இறங்கிடாதீங்க எனவும், அப்புறம் எங்க பாடு அதோ கதி தான் என அவரை அன்புடன் வார்னிங் செய்ததாகவும், உண்மையிலேயே இதெல்லாம் மறக்க முடியாத நிகழ்வுகள் தான் என, நடிகர் கார்த்திக் அந்த பேட்டியில் மனம் திறந்து தெரிவித்துள்ளார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.