சினிமா / TV

காவல் நிலையம் முன்பு பிரபல நடிகர் போராட்டம்.. கைது செய்ததால் பரபரப்பு!

நடிகர் மோகன் பாபுவின் இளைய மகனும் திரைப்பட நடிகருமான மஞ்சு மனோஜ் நேற்று நள்ளிரவு பகராபேட்டை காவல் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டம் செய்தார்.

திருப்பதியில் இருக்கும் மஞ்சு மனோஜ் பகராபேட்டை அருகே உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் தங்கியுள்ளார். இந்த நிலையில் திங்கட்கிழமை நள்ளிரவு இரவு அந்தப் பகுதியில் ரோந்து சென்றபோது, ​​தனியார் பவுன்சர்கள் இருப்பதைக் கவனித்த போலீசார் அவர்களிடம் விசாரித்தனர்.

இதுகுறித்து பவுன்சர்கள் மனோஜிடம் தெரிவித்ததால் உடனடியாக மனோஜ் காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு போலீசாரிடம் ஏன் என்னையும் எனது பவுன்சர்களை விசாரிக்கிறார்கள் என்று கோபத்தை வெளிப்படுத்தி தான் செல்லும் இடமெல்லாம் போலீசார் தன்னை துன்புறுத்துவதாகவும் வேண்டுமென்றால் தன்னை கைது செய்யுங்கள் என போலீசாரிடம் கூறினார்.

பின்னர் பாகராபேட்டை காவல் நிலையத்தின் படிகளில் அமர்ந்த மனோஜ் இரவு 11 மணியில் இருந்து சுமார் இரண்டு மணி நேரம் அங்கேயே இருந்தார். அப்போது
நான் என்ன தீவிரவாதியா, திருடனா ஏன் நள்ளிரவில் என்னை மிரட்டுகிறீர்கள். முதல்வரின் பெயரைச் சொல்லி மிரட்டுகிறார்கள் ஏன் அவருடைய பெயரைப் பயன்படுத்துகீறார்கள்? என்னை மிரட்டினன்னு யார் சொன்னார்கள் என்று கூறினால் நான் இங்க இருந்து போயிடுவேன் என்றார்.

இந்தச் சூழலில்தான் பாகராபேட்டை சி.ஐ. இம்ரான் பாஷா மஞ்சு மனோஜிடம் போனில் பேசினார். அப்போது நான் ரிசார்ட்டில் இருந்தால் எஸ்.ஐ. மற்றும் கான்ஸ்டபிள்கள் போலீஸ் வாகனத்தில் சைரன்களுடன் ஏன் வந்தார்கள்.

நான் என்ன புஷ்பாவா ஷெகாவத் போல வந்து என்னை பிடிக்க என்று கூறினார். தன்னை வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு வருவதாகவும் தனக்கு ரிசார்ட் வழங்கப்படக்கூடாது , ஓட்டலில் உணவு பரிமாறப்படக்கூடாது என்று மிரட்டப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

பின்னர் சி.ஐ. யிடம் பேசிய பிறகு மீண்டும் நாளை காலை வருவதாக கூறி மனோஜ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

நடிகர் மோகன் பாபுவின் குடும்பத்தில் சிறிது காலமாகவே கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது. மனோஜ் தனது சகோதரர் விஷ்ணுவை இலக்காகக் கொண்டு பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.

மேலும் விஷ்ணு தரப்பினர் மோகன் பாபு பல்கலைக்கழகத்தில் முறைகேடுகளைச் செய்து மாணவர்களுக்கு அநீதி இழைத்து வருவதாகவும் மனோஜ் குற்றம் சாட்டுகிறார். இந்தச் சூழலில், ஆரம்பத்தில் ஐதராபாத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட இந்த சர்ச்சை இருந்த நிலையில் தற்போது திருப்பதியில் நடந்து வருகிறது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

UPSC தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை… நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற சிவச்சந்திரன் முதலிடம்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. யுபிஎஸ்சி சர்வீஸ் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பணிகளுக்காக யுபிஎஸ்சி…

5 minutes ago

லோகேஷ் கனகராஜ் எடுத்த திடீர் முடிவு! என்ன சார் கடைசில இப்படி பண்ணிட்டீங்களே?

ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…

33 minutes ago

பாஜகவுடன் கூட்டணி வைப்பதும், பாடையில் உட்காருவதும் ஒன்ணுதான் : பரபரப்பை கிளப்பிய திமுக பேச்சாளர்!

பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…

1 hour ago

நண்பனின் தங்கைக்கு மோசமான மெசேஜ்.. வீட்டுக்கே சென்ற அத்துமீற முயன்ற VIRTUAL WARRIORS!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…

3 hours ago

ஓடும் ரயிலில் நடந்த கொடூரம்! பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாளவிகா மோகனன்? அடக்கடவுளே!

ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…

3 hours ago

கைமாறியது விஜய் டிவி… கோபிநாத், பிரியங்கா, மகாபா ஆனந்தை நீக்க முடிவு!

விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…

3 hours ago

This website uses cookies.