பொன்னியின் செல்வன் தற்போது 4 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்தப் படத்தின் வெற்றி வரலாற்றைத் தெரிந்துக் கொள்ளும் அந்த பிரம்மாண்டத்தை திரையில் பார்க்கும் மக்களின் ஆர்வத்தை எடுத்துக் காட்டியுள்ளது. முன்னதாக தமிழகத்தில் வெளியான பாகுபலி படங்களின் வெற்றியும் இதையே வெளிக்காட்டியுள்ளது.
பொன்னியின் செல்வன் படம் நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டவர்களின் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான பொன்னியின் செல்வன் படம் 4 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. 4 நாட்களில் சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனாக 250 கோடி ரூபாயை தாண்டியுள்ளது ஸ்கோர் செய்த மணிரத்னம் இந்தப் படத்தின் கேரக்டர்கள் தேர்வு, திரைக்கதை அமைப்பு, வரலாற்றுப் பின்னணியில் அமைந்த பொன்னியின் செல்வம் கதையை உள்வாங்கி அதை காட்சிகளாக கொண்டுவந்த நேர்த்தி உள்ளிட்டவற்றில் இயக்குநர் மணிரத்னம் ஸ்கோர் செய்துள்ளார்.
படத்தின் பிரம்மாண்டம் படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. மணிரத்னத்தின் தாகம் மணிரத்னத்தின் பல ஆண்டு கனவே படமாக அமைந்துள்ள நிலையில், அந்தக்கதையை திரைவடிவமாக கொடுக்க நினைத்த அவரின் தாகமே இந்தப் படத்தை 150 நாட்களில் எடுக்க மிகவும் உறுதுணையாக இருந்திருக்க வேண்டும். இதே பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் எடுத்து முடிக்க ராஜமௌலிக்கு 5 ஆண்டுகள் பிடித்ததாக அவரே கூறியுள்ளார்.
தெலுங்கு ரசிகர்கள் வாக்குவாதம் இதனிடையே பொன்னியின் செல்வன் படம் வெளியானவுடன் இணையதளத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாகுபலி படம் தான் பெஸ்ட் என்று தெலுங்கு ரசிகர்கள் பொன்னியின் செல்வன் படத்தை குறைகூறி வந்தனர்.
தெலுங்குப் படங்களை நாம் கொண்டாடிவரும் நிலையில், அவர்களின் இந்த நிலைப்பாடு குறித்து தமிழ் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். நாகர்ஜுனா கருத்து இதனிடையே தன்னுடைய படத்தின் பிரமோஷனுக்காக சென்னை வந்த தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இதையெல்லாம் கண்டுக் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். தான் படத்தை பார்த்ததாகவும் குறிப்பாக பொன்னியின் செல்வன் நாவலை முன்னதாக படித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.