தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், காமெடியன் என பல கதாபாத்திரங்களில் நடித்து முக்கிய இடத்தை பிடித்தவர் நடிகர் நாசர். இவர் குணச்சித்திர நடிகராக இருந்து மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். தற்போது நடிகர் சங்க தலைவராகவும் இருந்து வருகிறார்.
நாசர் தற்போது சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக உயர்ந்திருந்தாலும், ஆரம்பத்தில் அவரது அப்பா ஆசைக்காகத்தான் நடிப்பு பயிற்சி பெற சென்று, அதன் பின் தான் நடிகராக வாய்ப்பு தேடினார்.
தான் சினிமாவில் நடிக்க வரவேண்டும் என்ற பெரிய எண்ணம் இல்லை என்றும், ஆனால் சூழ்நிலை தன்னை மாற்றிவிட்டதாகவும், தன் தந்தைக்கு தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பெரிய விருப்பம் இருந்ததாகவும், ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
இதனிடையே, நாசரின் அப்பா மாபு பாஷாவுக்கு 95 வயதாகும் நிலையில், இன்று உடல்நிலை குறைவால் மரணம் அடைந்தார். அவர் செங்கல்பட்டில் வசித்து வந்த நிலையில், உயிரிழந்திருப்பதாகவும் இதனால், நாசர் குடும்பம் தற்போது துயரத்தில் மூழ்கியுள்ளது. இவர்களுக்கு திரைத்துறையினர் பலரும் தங்களது ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.