நடன இயக்குனர் மற்றும் நடிகருமான பிரபு தேவா தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டர், இயக்குனர், நடிகர் என பன்முக திறமைகளை கொண்டு அசத்தி வருபவர். ஆரம்ப காலத்தில் தனது நடனத்தால் ரசிகர்களை புல்லரிக்க செய்த நடிகர் பிரபுதேவா, தற்போது ஹீரோவாக ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்து வருகிறார்.
நடிகர் பிரபுதேவா இயக்கத்தில் வெளிவந்த போக்கிரி திரைப்படம் விஜய்யின் கேரியரில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றது அனைவரும் அறிந்த ஒன்று. அந்தவகையில், போக்கிரி படம் விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் பிரபுதேவா விஜய் கூட்டணியில் மீண்டும் உருவான வில்லு திரைப்படம் படுதோல்வி அடைந்து மண்ணை கவ்வியது.
நடன இயக்குனர் மற்றும் நடிகருமான பிரபு தேவா நடிப்பு ஒரு பக்கமும், நடனம் ஒரு பக்கமும் தனது முழு நேரத்தை செலவழித்து வருகிறார். தற்போது பிரபுதேவா நடிப்பில் வெளியான பகீரா படத்தை பார்த்த ரசிகர்கள் படத்திற்கு அமோக வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.
இதனிடையே, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பிரபுதேவா தனது மகன்களை குறித்து பேசி இருந்தார். அதாவது இதற்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தனது மகன் தன்னிடம் சினிமாவுக்குள் வர ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்து இருந்ததாகவும், தன் மகன் அப்படி கூறியதை கேட்டவுடன் தான் ஷாக் ஆகிவிட்டதாகவும், ஏனென்றால் சினிமா லேசு பட்ட காரியம் கிடையாது என்று பிரபு தேவா ஒரு மேடையில் தெரிவித்து இருந்தார்.
தற்போது இதனை கேள்வியாக தொகுப்பாளர் பிரபு தேவாவிடம் கேட்டதற்கு பதில் அளித்த அவர் தான் எந்த அட்வைஸ்-ம் கொடுக்க மாட்டேன் என்றும், அடிச்சுப்பிடிச்சு அவங்களா தான் மேல வரணும் என தெரிவித்துள்ளார்.பிரபுதேவா பேசியதை வைத்து பார்க்கும் பொழுது கூடிய விரைவில் அவரின் மகன்கள் வெள்ளித்திரைக்கு வருவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
This website uses cookies.