தமிழ் திரையுலகை பொருத்தவரை சிவாஜி மற்றும் எம்ஜிஆர் அவர்கள் வரிசையில் நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் வைத்திருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையே. அவரது ஸ்டைல், பேச்சு, நற்குணம் என அனைத்திற்கும் ரசிகர் கூட்டம் என்ன படையே உள்ளது என்பது தான் உண்மை.
ஆரம்ப காலக்கட்டத்தில் பல கஷ்டங்களுக்கு பிறகு, இன்று சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருக்கிறார். நடிகர் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும், இந்த திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக பெரிய பட வாய்ப்பை நிராகரித்துள்ளார்.
அதாவது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்சை நடிக்க வைப்பதாக தான் திட்டமிட்டிருந்துள்ளனர். ஆனால், அந்த சமயத்தில் நடிகர் ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பொன்னியின் செல்வன் வாய்ப்பை மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
மேலும், அந்த திரைப்படம் வெளிவந்த பிறகு, பலராலும் கிண்டல் செய்யப்பட்டு வந்தார். ஒருவேளை ரஜினியுடன் நடிக்காமல், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்திருக்கலாம் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியதாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் தனுஷ். நடிகராக மட்டுமல்லாமல், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர்.…
யாருடைய கையிலும், காலிலும் விலங்கு போட்டு நிறுத்துவது இயக்கம் அல்ல என நாதகவில் இருந்து நிர்வாகிகள் விலகுவது குறித்து சீமான்…
This website uses cookies.