தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. நடிப்பு மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், கதாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவராக திகழ்கின்றார் சிம்பு. இடையில் சில ஆண்டுகள் சர்ச்சைகளிலும், தோல்விகளிலும் சிக்கி வந்த சிம்பு கடந்தாண்டு வெளியான மாநாடு படத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்பினார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியானது. இப்படமும் ரசிங்கர்களின் அமோக வரவேற்பை பெற்று சிம்புவிற்கு வெற்றி படமாக அமைந்தது.
இதையடுத்து தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து வருகின்றார் சிம்பு. இந்நிலையில் சிம்பு அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும், சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.
மேலும் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி வருவதாக தகவல் வந்துள்ளது. இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான விண்ணை தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் துவங்கவுள்ளதாக பேசப்பட்டு வருகின்றது.
கடந்த 2010 ஆம் ஆண்டு சிம்பு மற்றும் த்ரிஷாவின் நடிப்பில் வெளியான விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் காதல் காவியமாக காலம் கடந்தும் திகழ்கின்றது. எனவே இதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் பல வருடங்களாக கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் உருவாவதாக இருந்தது. ஆனால் அதற்கு முன் கௌதம் மேனன் சிம்புவை வைத்து விண்ணை தாண்டி வருவாயா இரண்டாம் பாகத்தை உருவாக்கப்போவதாக தகவல் வந்துள்ளது. இதனைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடலூரில், வேறு ஒருவரைக் காதலித்த நிலையில், திருமணம் முடித்த கணவருக்கு, மனைவி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.…
ட்ரெண்டிங் NO1-ல் குட் பேட் அக்லி ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர்…
சின்னத்திரை மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இவர் சக சீரியல் நடிகரை திருமணம்…
உத்தரகாண்டில் டிஜிட்டல் அரஸ்டில் 18 நாட்கள் பேராசிரியர் சிக்கி 47 லட்சத்தை இழந்தது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
சொந்தத் தொகுதியிலேயே தோற்ற பிரசாந்த் கிஷோர் விஜயை எப்படி ஜெயிக்க வைக்கிறார் என்பதைப் பார்க்கலாம் என சரத்குமார் கூறியுள்ளார். பெரம்பலூர்:…
This website uses cookies.