நடிகர் சிம்பு, தற்போது பத்து தல, கொரோனா குமார் மற்றும் வெந்து தணிந்தது காடு படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே, சிம்புவின் வாலு படத்திற்கு பிறகு, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் படம் எடுக்க இருந்த நிலையி;ல், சிம்புவின் உடல் எடை கூடி நடிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தார் என தகவல் பரவியது. மேலும் அவர் சூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியாக வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனால் ஏஜிஎஸ் நிறுவனம் அப்போது இருக்கும் சிம்புவை வைத்து படம் தயாரிக்காமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பை பெற்றது. இதனால் சிம்புவிற்கு அடுத்து அடுத்து படங்களில் நடிக்க ஆர்வம் அதிகரித்துள்ளது.
இதனிடையே, சிம்புவிடம் ‘ஓ மை கடவுளே’ படத்தின் இயக்குனர் கூறியுள்ள கதை சிம்புவிற்கு பிடித்துள்ளதாக தெரிகிறது. மேலும் சிம்புவுடன் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து உள்ளதால், கூடிய விரைவில் சிம்புவின் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் ஒரு புதிய படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவின் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளிவர உள்ளதால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…
தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…
This website uses cookies.