விக்ரம் நடித்த “வீர தீர சூரன்” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வேல்ஸ் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்க: நான் செய்தது மிகப்பெரிய தவறு…வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ்.!
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம்,எஸ்.ஜே.சூர்யா,மலையாள நடிகர் சூரஜ், இயக்குநர் அருண்குமார்,இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
அப்போது மேடை ஏறிய மலையாள நடிகர் சூரஜ் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்து,அங்கு இருந்தவர்களை வெகுவாகக் கவர்ந்தார்.பல மலையாளப் படங்களில் நடித்துள்ள இவர் “வீர தீர சூரன்” படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.
அவர் பேசியதாவது”எனக்கு முதல் குழந்தை பிறந்தபோது, முதன்முறையாக கேரள மாநில அரசு விருது கிடைத்தது.இரண்டாவது குழந்தை பிறந்தபோது,சிறந்த நடிகருக்கான இரண்டாவது மாநில விருது கிடைத்தது.மூன்றாவது குழந்தை பிறந்தபோது,தேசிய விருதும் கிடைத்தது.அடுத்து ஆஸ்கார் விருது வாங்க வேண்டுமானால், நான்காவது குழந்தையும் பிறக்க வேண்டியது தான்” என்று நகைச்சுவையாக கூறினார்.
அவரது இந்த கலகலப்பான பேச்சு அங்கிருந்த அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது,மேலும் அவர் எஸ் ஜே சூர்யா மாதிரி பேசி அசத்தினார்.
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளது. ரசிகர்களை தவிர மற்ற ரசிகர்களை…
வழக்கு எண் 18/9, மாநகரம், இறுகப்பற்று போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீராம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று,…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில்…
This website uses cookies.