சென்னை : நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடித்தது குறித்து நடிகர் சூர்யா கருத்து வெளியிட்டிருப்பது ரசிகர்களிடையே டிரெண்டாகி வருகிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் விக்ரம். இந்தப் படத்தில் ஃபஹத் பாசில், ஷிவானி நாராயணன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அரசியலுக்கு சற்று காலம் முழுக்கு போட்டு பிறகு, கமல் நடிப்பில் வெளியான முதல் படம் என்பதால், விக்ரம் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே சென்றது.
நேற்று இந்தப் படம் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்திற்கு நேர்மறையான கருத்துக்களே வெளியாகி வருவதால், கமல் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். RRR மற்றும் KGF2 உள்ளிட்ட பான் இந்தியா திரைப்படங்களுக்கு சவால் விடுக்கும் விதமாக காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக படத்தை பார்த்தவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடித்தது குறித்து நடிகர் சூர்யா கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அன்பான கமல் அண்ணா, எப்படி சொல்றது.. கமல்ஹாசன் உடன் இணைந்து திரையில் தோன்ற வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறியது. என் கனவை நிஜமாக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, விக்ரம் படத்தில் நடிப்பதற்காக நடிகர் சூர்யா சம்பளம் எதுவும் வாங்கவில்லை என்ற தகவல் அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது, நடிகர் சூர்யாவின் இந்தக் கருத்தை அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல், கமல் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக…
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
This website uses cookies.