ஐதராபாத்தில் 68வது பட சூட்டிங்கில் இருந்த நடிகர் விஜய், விஜயகாந்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை திரும்பினார். விஜயகாந்த் உடலுக்கு நேற்றைய தினமே அஞ்சலி செலுத்திய அவர், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க இருக்கிறார்.
இன்று சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற அவர், நெல்லையில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மேற்கொண்டனர். அரசியல் வருகையை நோக்கி ஒவ்வொரு நடவடிக்கையும் எடுத்து வரும் நடிகர் விஜய், இந்த முறை தூத்துக்குடி, நெல்லையை குறி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
சில மாதங்களுக்கு முன் மாணவர்களுக்கு ஊக்குத்தொகை வழங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நடிகர் விஜய் தற்போது, அரசியல் என்ட்ரிக்காக ஒவ்வொரு முயற்சியும் தொடர்ந்து செய்து வரும் நிலையில், தற்போது நெல்லைக்கு சென்று அங்கு வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2000 மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்க உள்ளார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நெல்லை மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த 1000 நபர்களுக்கு இந்த நலத்திட்ட உதவியை விஜய் செய்யவிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில், விஜய் கலந்து கொண்டதால் அவரைக் காண கடலென ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர். அப்போது, விஜய் நிகழ்ச்சி அரங்கில் தட்டு தடுமாறி உள்ளே வந்தார். அந்த சமயத்தில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர் விஜய் வருவதை அறியாமல் கதவை மூடிவிட்டார். இதனால், விஜய் தடுக்கி கீழே விழ உடனே கடுப்பான புஸ்ஸி ஆனந்த் கதவை மூடிய அந்த நபரை முதுகில் ஓங்கி அடித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரனாகி வருகிறது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.