தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். விஜய் அரசியலுக்கு செல்லும் காரணத்தினால் தளபதி 69 தான், தன்னுடைய கடைசி படம் என அறிவித்து உள்ளார். இப்படத்திற்கு பின் விஜய் சினிமாவில் இருந்து விலக முழு நேர அரசியலில் பணியாற்ற உள்ளார்.
மேலும் படிக்க: சூர்யா கிட்ட அது சுத்தமா பிடிக்கல.. விவாகரத்து குறித்து வெளிப்படையாக பேசிய ஜோதிகா..!
முன்னதாக, 20 வருடங்களுக்கு முன்பு அதாவது 2004 ஆம் ஆண்டில் வெளியான கில்லி படம் தற்போது ரசிகர்கள் அதிக அளவில் வந்து கில்லி திரைப்படத்தை தியேட்டரை உற்சாகமாக பார்த்துக் கொண்டாடி வருகின்றனர். கடந்த பத்து நாட்களுக்கு மேலாக நடிகர் விஜயின் கில்லி படம் ரீ ரிலீஸ் ஆகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
சுமார் எட்டு கோடி பட்ஜெட்டில் தயாரான கில்லி படம் 50 கோடி வரை வசூல் செய்து சாதனை செய்தது. அதாவது, தமிழில் முதலில் 50 கோடி வசூல் செய்து சாதனை படைத்த முதல் படம் என்ற பெருமையும் பெற்றது. தரணி மற்றும் கில்லி படத்தில் நடித்த பிரபலங்கள் பலர் ரீரிலிசை ரசிகர்களுடன் கொண்டாடியுள்ளனர். இந்த நிலையில், கில்லி படம் குறித்து விஜய் கூறிய ஒரு பேட்டி இப்போது வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: கவுண்டமணி கூட அதை பண்ணனுமா?.. ஷாக்காகி பயந்து போன பிரபல நடிகை..!
அதாவது, கில்லி படத்தில் உங்களுக்கு பிடித்தமான பாடல் என்ன என்று கேட்டதற்கு விஜய் கில்லியில் எல்லா பாடலுமே மாசான பாடல் தான் இருக்கும். அதில், எனக்கு மிகவும் பிடித்தது அர்ஜுனரு வில்லு பாடல் தான். அந்த காட்சியில், என்னை சுற்றி இருக்கும் அத்தனை பேரையும் ஒரே ஆளாக அடித்துப் போட்டுவிட்டு திரிசாவை காப்பாற்றி ஒரு ஜீப்பில் வேகமாக செல்வேன். அந்த மாஸ் சீனுக்கு ஏற்றார் போல் அந்த பாட்டும் ஒரு எனர்ஜியாக இருக்கும். இப்போது, காரில் ஏறினாலும் அந்த பாடலை போட்டு விடுவேன். அந்தப் பாடலை போட்டால் தான் காரை அப்படியே ஒரு க்ரிப்பா ஓட்டிட்டு போவேன் என்று தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.