அந்த தப்பு செய்ததால் செருப்பால் அடித்தேன் – வாழ்க்கை தொலைத்த நடிகை வேதனை!

தமிழ் சினிமாவில் மிகவும் போல்டான நடிகையாக ரசிகர்கள் மனத்தில் இடம் பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன். பிரபல நடிகை லக்ஷ்மியின் மகளான இவர் தனது கரகர குரலில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

சிவகுமார் நடிப்பில் 1990ம் ஆண்டில் வெளிவந்த நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்கிற படம்மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன், பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான ராசுக்குட்டி படம் மூலம் தான் பிரபலமானார். அதன் பிறகு ரஜினியுடன் எஜமான், கமலுடன் பஞ்சதந்திரம் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார் ஐஸ்வர்யா.

அதன் பின்னர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஆறு படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் சவுண்டு சரோஜா என்கிற கேரக்டரில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆனார். அதன் பிறகு அபியும் நானும் படத்தில் திரிஷாவுக்கு அம்மாவாக அழகான ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். அதன் பின்னர் சரியாக படவாய்ப்புகள் இல்லாததால் சோப்பு விற்று பிழைப்பு நடத்தி வந்தார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், இந்த தவறு செய்து வாழ்க்கையே மாறிவிட்டது என்றால் அது எந்த தவறு? என கேட்டதற்கு, ரோஜா படத்தில் ஹீரோயினாக நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால், அந்த நேரத்தில் நான் தெலுங்கு படத்தில் நடித்ததால் வேண்டாம் என ஒதுக்கிவிட்டேன். பின்னர் தெலுங்கு பட ஷூட்டிங் நடக்கவே இல்லை. ரோஜா படம் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அந்த படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்ததும் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன் என எண்ணி என்னை நானே செருப்பால் அடித்துக்கொண்டேன் என ஐஸ்வர்யா அந்த பேட்டியில் கூறினார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

பாஜக முக்கியப் புள்ளி படுகொலை… நள்ளிரவில் பின்தொடர்ந்த கும்பல் வெறிச்செயல்!

புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…

44 minutes ago

நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!

மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…

48 minutes ago

கணவர் வீட்டை விட்டு போக முடியாது : புதுச்சேரியை விட்டு செல்ல மறுக்கும் பாக்., பெண்!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…

1 hour ago

தேர்தல் நேரத்தில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.. திமுக எம்பிக்கு கோர்ட் பரபர உத்தரவு!

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…

2 hours ago

நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…

2 hours ago

இளையராஜா செஞ்சது சரியா?- கெத்து தினேஷுக்கு இவ்வளவு கெத்தா? என்னப்பா இது?

இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…

2 hours ago

This website uses cookies.