காலையில் எழுந்ததும் “குடிக்கணும்னு தோணுச்சுனா குடிப்பேன்”… மது அருந்துவது குறித்து புது விளக்கம் கொடுத்த பிரபல நடிகை..!

நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் 70 -களில் முன்னணி நடிகையாக வலம் வந்த லட்சுமியின் மகள். இவர் “நியாயங்கள் ஜெயிக்கட்டும்” என்ற படத்தின் மூலம் 1990 -ம் ஆண்டு தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் என்று சொல்லலாம். பல படங்களில் நடித்து வந்த இவர், 1994 -ம் ஆண்டு தன்வீர் என்பவரை திருமணம் செய்து கொண்டு, சில ஆண்டுகளுக்கு பிறகு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்தார். இதன் பின் தன்வீர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு அவருடைய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

இதனிடையெ, பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஐஸ்வர்யா பாஸ்கரன், தன்னுடைய திருமணம் வாழ்க்கை பற்றி மனம் திறந்து பகிர்ந்துள்ளார். அதில் ஐஸ்வர்யா பாஸ்கரன், “தன் முன்னாள் கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதில் தனக்கு வருத்தம் இல்லை” என்றும், “அதே போல தானும் விவாகரத்து செய்த பிறகு ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும், ஆனால் அதுவும் குறுகிய காலத்திலேயே முடிந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சமீபத்தில் ஐஸ்வர்யா பாஸ்கரன், அருண் விஜய் நடிப்பில் வெளியான “யானை” என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது பிக்பாஸ் கவின் நடித்த டாடா படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே, பேட்டியில் பெண்கள் குடிப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, இதெல்லாம் ஒரு வித சந்தோஷம் தான், போதை முடிந்ததும் உண்மையான வாழ்க்கைக்கு வந்து தான் ஆக வேண்டும் என்றும், குடிப்பழக்கத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தி நிறுத்த தேவையில்லை எனவும், காலையில் எழுந்ததும் குடிக்கணும்னு தோணுச்சுனா குடிப்பேன், ஆனால், எல்லாவற்றிற்கும் ஒரு limit இருக்கிறது என்று நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் கூறியுள்ளார்.

Poorni

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

9 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

9 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

10 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

10 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

10 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

11 hours ago

This website uses cookies.