தற்கொலை செய்துக் கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் – பின்னணி நடந்த சோகம்!

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.

அட்டகத்தி திரைப்படம் தான் இவரை பிரபலமாக்கியது. அதன் பின்னர் வடசென்னை, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை, தி கிரேட் இந்தியன் கிச்சன் உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது கெரியருக்கு மைல் கல்லாக அமைந்தது. கடைசியா இவரது நடிப்பில் வெளியான ஃ பார்ஹான என்ற திரைப்படம் சர்ச்சையை சந்தித்தது.

இந்நிலையில் அண்மையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மாவுக்கு அன்னையர் தினத்தில் ஆளுநர் சிறந்த அம்மாவுக்கான விருதினை வழங்கி இருந்தார். பின்னர் அது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர். எனக்கு மொத்தம் 4 குழந்தைகள். 3 மகன் ஒரு மகள். என் கணவர் குழந்தைகள் வளரும் நேரத்தில் இறந்துவிட்டார். பின்னர் பெரும் பொறுப்புடன் அவர்களை கஷ்டப்பட்டு வளர்ந்தேன்.

மகள் ஐஸ்வர்யாவுக்கு மட்டும் எப்படியாவது திருமணம் செய்து அனுப்பிடவேண்டும் என நினைத்தேன். ஆனால், அந்த நேரத்தில் என் மூத்த மகன் காதல் தோல்வியால் தற்கொலை செய்துக்கொண்டான். அதிலிருந்து மீண்டு வருவதற்குள் இரண்டாவது மகன் விபத்தில் சிக்கி உயிரிழந்தான். இதனால் என் கும்பம் சுக்குநூறாகிவிட்டது. அந்த சமயத்தில் மணிகண்டன் தான் ரூ. 25 ஆயிரம் சம்பாதித்தான் அது தான் குடும்பத்தை வழிநடத்தி சென்றது என உருக்கமாக நடந்த சம்பவங்களை தெரிவித்தார்.

Ramya Shree

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

10 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

11 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

11 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

11 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

11 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

12 hours ago

This website uses cookies.