ஐஸ்வர்யா ராஜேஷ் படத்திற்கு தடை- என்ன மூவி தெரியுமா?.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Author: Vignesh
23 July 2024, 5:33 pm

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.

aishwarya-rajesh

அட்டகத்தி திரைப்படம் தான் இவரை பிரபலமாக்கியது. அதன் பின்னர் வடசென்னை, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது கெரியருக்கு மைல் கல்லாக அமைந்தது. சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து சொப்பன சுந்தரி திரைப்படம் வெளியாகி தோல்வி அடைந்தது. கடைசியாக ஃபர்ஹானா என்ற படத்தில் நடித்து இஸ்லாமிய மக்களின் வெறுப்புக்கு ஆளாகினார்.

aishwarya-rajesh

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் மிகவும் முக்கியமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் மலையாளத்தில், அஜயந்தே ரண்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் ஜித்தின் லால் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹீரோவாக டொவினோ தாமஸ் நடித்துள்ளார். இவர் தமிழில் மாரி படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அஜயந்தே ரண்டம் படத்தை திரையிட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், எர்ணாகுளத்தை சேர்ந்த டாக்டர் வினித் என்பவர் இந்த திரைப்படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கில் படத்தை தயாரிக்க தன்னிடம் மூன்று புள்ளி 20 கோடி பெற்று ஏமாற்றி விட்டனர். எனவே படத்தை வெளியிடக் கூடாது என்று வழக்கில் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்திற்கு தடை விதித்துள்ளது.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!