நடிகையாக அறிமுகமான புதிதிலே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அதன் பின்னர் மிகப்பெரிய அளவில் உச்ச நடிகையாக இடம் பிடித்தவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அமலா பால் நடத்தை சரியில்லை என்பதால் விவகாரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் மாஜி கணவர் வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.
இதனிடையே மும்பையை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்த அமலா பால் அவருடன் லிங்க் டூ கெதரில் வாழ்ந்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரையும் புரிந்துவிட்டு சுதந்திரமாக சுற்றி திரிந்து வந்தார்.
இதையடுத்து அண்மையில் ஜகத் தேசாய் என்பவரை மூன்றாம் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு முன்னரும் அதன் பின்னும் அவருடன் எடுத்துக்கொண்ட படு ரொமான்டிக்கான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார்.
திருமணம் ஆகி இரண்டு மாதத்திலே கர்ப்பம் ஆகிவிட்டார். அவ்வப்போது கர்ப்பகால போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அதிகாலையில் கடலோரம் வயிற்றை மடித்துக்கொண்டு குத்தவச்சி உட்கார்ந்து யோகா செய்த வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு,
கர்ப்ப காலத்தில் மலசனாவின் அழகை தழுவும்! இடுப்பு சக்தி மற்றும் மகிழ்ச்சியான அதிர்வுகளுக்கு இந்த குந்துதல் மந்திரம் எனது பயணமாக உள்ளது. நீண்ட கடற்கரை நடைபயிற்சி, வெறுங்காலுடன், சூரிய அஸ்தமனத்தைப் பிடிப்பது கர்ப்ப குமட்டலுக்கு எனது சிறந்த சிகிச்சை. என் கால்கள் மணலையும் உப்புநீரையும் தொடும்போது அது ஒரு அதிசய குணமாக உணர்கிறேன். (குறிப்பு)இந்த ஆசனத்தை செய்வதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவும். ஜகத் தேசாய் என் சிறந்த கணவர் மற்றும் சிறந்த நண்பர், எனது ஓட்டத்தில் நான் இருப்பதைத் தடுக்காமல் என் நடவடிக்கைகளை கவனமாகக் கவனிக்கிறார். அவர் கிடைக்க ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன் என பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், தனது கணவருடன் சேர்ந்து அவர் தனக்கு பிறக்கப்போவது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்ற விளையாட்டை விளையாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இரட்டை குழந்தைகள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.