அமலாபால் தமிழில் 2010-ம் ஆண்டு வெளியான “சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அமலா பால் நடித்த முதல் படம் ஒரு பலான படம் என்பதால் அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார் நடிகை அமலாபால்.
அதன்பின் அமலாபால் நடித்த “மைனா” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது படமும் ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்தது. மைனா படத்தில் அமலாபால் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அந்த ஆண்டில் சிறந்த புதுமுக நடிகைக்கான விஜய் விருது பெற்றார்.அதன் பின் தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார்.
நடிகையாக அறிமுகமான புதிதிலே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அதன் பின்னர் மிகப்பெரிய அளவில் உச்ச நடிகையாக இடம் பிடித்தவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அமலா பால் நடத்தை சரியில்லை என்பதால் விவகாரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் மாஜி கணவர் வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.
இதனிடையே மும்பையை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்த அமலா பால் அவருடன் லிங்க் டூ கெதரில் வாழ்ந்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரையும் புரிந்துவிட்டு சுதந்திரமாக சுற்றி திரிந்து வந்தார்.
இதையடுத்து, அண்மையில் ஜகத் தேசாய் என்பவரை மூன்றாம் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு முன்னரும் அதன் பின்னும் அவருடன் எடுத்துக்கொண்ட படு ரொமான்டிக்கான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார்.
இந்நிலையில், திருமணம் ஆகி இரண்டு மாதம் கூட ஆகாத நிலையில், முன்னதாக தான் கர்ப்பமாக இருப்பதை கணவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களுடன் அறிவித்து இருந்தார். தற்போது கணவருடன் ரொமான்ஸ் செய்தவாறு எடுத்த வீடியோவை பகிர்ந்து இருந்தார். கர்ப்பமான விசயத்தை இணையத்தில் பகிர்ந்து வைரலான நிலையில், இதையடுத்து, அமலா பாலுக்கு மளமளவென வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தற்போது, ஒரு வீடியோவை வெளியிட்டு அதில் மாற்றத்திற்காக பயப்படாதீர்கள். டார்வின் கூறியபடி மிகவும் வலுவான மிகவும் புத்திசாலித்தனமான இனங்கள் எதுவும் வாழ்வதில்லை. யார் மாற்றத்திற்கு உட்படுகிறார்கள் அவர்களே பிழைக்கிறார்கள் எனக்கு கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாக வருகிறது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.