தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். விஜய், அஜித், தனுஷ், கார்த்தி, விஷால் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.
பின்னர் திருமணம் செய்த காஜல் குழந்தை பிறந்ததால் சினிமாவுக்கு சின்னதாக பிரேக் கொடுத்தார். அவர் நடிப்பில் இந்தியன் 3 படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகும் சிக்கந்தர் படத்திலும் காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.
இதனிடையே பேட்டி ஒன்றி காஜல் அகர்வால் தனது மகனுக்காக செய்த செயலை பகிர்ந்துள்ளார். குழந்தை நீள் பிறந்த சமயம் தெலுங்கு படத்தில் கமிட் ஆகியிருந்தேன்.
படத்தை தவிர்க்க முடியாமல் போனதால் திருப்பதியில் இருந்து 4 மணி நேரம் பயணம் செய்து குக்கிராமத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்.
அந்த கிராமத்திற்கு குழந்தையை அழைத்து செல்ல முடியாத சூழல் உருவானதால் திருப்பதியில் எனது குழந்தை மற்றும் குடும்பத்தினரை தங்க வைத்தேன்.
இதையும் படியுங்க: இன்னைக்கு ஓடிடில இத்தனை படம் ரிலீஸா? கங்குவாவை பதம் பார்க்கும் லிஸ்ட்.!!
படப்பிடிப்புக்கு செல்லும் வழியில் 2 மணி நேர பயண தூரத்தில் எனது வாகனத்தை நிறுத்தி தாய்ப்பால் எடுத்து தனது கார் ஓட்டுநரிடம் கொடுத்து அனுப்புவேன்.
இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பாலை எடுத்து மகனுக்காக கொடுத்து அனுப்பினேன். தாய்ப்பால் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமானது என கூறினார்.
குழந்தை பெற்றால் அழகு போய்விடும் என நினைக்கும் நடிகைகளுக்கு மத்தியில் காஜல் அகர்வால் செய்த செயல் பாராட்டை பெற்று வருகிறது.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.