நடிகை கல்யாணி பிரியதர்ஷன் (Kalyani Priyadarshan) தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர், 2017 ஆம் ஆண்டு நாகர்ஜூனாவின் மகன் அகில் அக்கினேனி நடித்து வெளிவந்த “ஹலோ” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் தந்தை திரைப்பட தயாரிப்பாளர் பிரியதர்ஷன் சோமன் நாயர் மற்றும் தாயார் நடிகை லில்லியும் ஆவர்.
இந்த எதிர்பாத்த அளவிற்கு அந்த படம் வெற்றிபெறவில்லை என்பதால் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டார் . என்ன தான் இவர் மலையாளத்தை பூர்விகமாக கொண்டிருந்தாலும் இவர் நடிகையாக அறிமுகமானது தெலுங்கு படத்தில் தான் . சிறு இடைவெளிக்கு பின், 2019 ஆம் ஆண்டு இரண்டு தெலுங்கு படங்களில் நடிக துடங்கினார் .பின்னர் தமிழிலும் 2019-ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘ஹீரோ’படத்தின் அறிமுகமானார்.
நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் தமிழில் நடித்த முதல் படமே சுமாரான படமாக அமைந்ததால் மக்களெடையே நல்ல வரவேற்பு கிடைக்க வில்லை . எனினும் கடந்த மாதம் 25 ஆம் தேதி, சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படம் மிக பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளதால் கல்யாணி ப்ரியதர்ஷனுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டின் வெற்றியை தொடர்ந்து கல்யாணி மலையாள சினிமா பக்கம் பிஸி ஆக நடித்து கொண்டிருக்கிறார் . இதனால் தமிழ் சினிமா பக்கம் இவரை பார்க்க முடியவில்லை என்றாலும் பல மலையாள படங்களில் கமிட் ஆகு நடித்து கொண்டிருக்கிறார் . சமீபத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மரைக்காயர்’ படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய அழகாலும் கியூட் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை கல்யாணி . கடந்த மாதம் மலையாளத்தில் வெளியான “ஹிருதயம்” படம் நடிகை கல்யாணிக்கு மற்றும் ஒரு ஹிட் படமாக அமைந்துள்ளது. மலையாள சினிமா ரசிகர்களையும் தாண்டி தமிழ் சினிமா ரசிகர்களையும் இந்த படம் கவர்ந்துள்ளது .
மற்ற நடிகைகள் போல் சமூக வலைத்தளத்தில் மிக ஆக்டிவாக இருக்கும் கல்யாணி ப்ரியதர்ஷன் அவ்வப்போது தன்னுடைய விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார் .அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர் .
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
This website uses cookies.