தந்தையால் பாலியல் தொல்லையை அனுபவித்தேன் : பகீர் குற்றச்சாட்டை வைத்த பிரபல நடிகை..!

தர்மத்தின் தலைவன், வருஷம் 16, சின்னதம்பி என ஹிட் படங்கள் மூலம் தமிழில் கொடிகட்டி பறந்தவர் குஷ்பூ. தமிழைத் தவிர்த்து, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார். சொல்லப்போனால், எந்த நடிகைக்கும் அமையாத அளவுக்கு நடிகை குஷ்புவிற்கு கோவில் கட்டியது தமிழ்நாட்டு ரசிகர்கள்தான். இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்தனர் இவர்களுக்கு 20 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.

சினிமா வாய்புகள் குறைந்து போகவே அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தார் குஷ்பு. தற்போது, அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், நடிகை குஷ்பூ தன் குண்டு உடம்பை எல்லாம் குறைத்து, ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

இந்நிலையில், நடிகை குஷ்பு அண்மையில் பேட்டி ஒன்றில் தன்னுடைய எட்டு வயதில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அவர், தன்னுடைய அப்பா, தன் அம்மாவை அதிகமாக அடிப்பார் என்றும், சிறு வயதில் ஆண் பிள்ளையோ, பெண் பிள்ளையோ பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டால், அதனால் ஏற்படும் பயம் அவர்களின் வாழ்க்கை முழுவதும் துரத்தி கொண்டே இருக்கும் என தெரிவித்தார்.

ஒரு ஆண்மகன் கட்டுன மனைவியை அடிப்பது, பெற்ற குழந்தைகளை பாலியல் கொடுமை செய்வதையெல்லாம் பிறப்புரிமை என்று நினைத்திருக்கலாம் எனவும், தனக்கு ஒரு 8 வயது இருக்கும் போது, அந்த வயதில் தன்னுடைய அப்பாவால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன்.

அதை எதிர்த்து கேள்வி கேட்க தன்னால் முடியவில்லை. ஏனென்றால் தான் ரொம்ப சின்ன பொண்ணு என்றும், அம்மாவிடம் கூறினால் நம்புவார்களா? என்று தெரியவில்லை. அதற்கு காரணம் என் அம்மா கணவனவே கண்கண்ட தெய்வம் என்று சொல்லி வாழும் ஒரு ஜீவன் எனவும், அதனால் அவரிடம் சொல்லல என்றும், தொடர்ந்து அப்படியே செய்து வந்தார்.

அவரை எதிர்த்து கேள்வி கேட்க தனக்கு 15 வயதில் தான் தைரியம் வந்தது. அப்புறம் தனக்கு 16 வயது ஆன போது தங்களை விட்டு சென்றுவிட்டார் எனவும், அதன் பின்னர் அடுத்த வேளை சோற்றுக்காக என்ன செய்ய போகிறோம் என்று தெரியாமல் நின்றோம் என்று மனவலியுடன் தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

3 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

5 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

5 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

6 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

7 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

7 hours ago

This website uses cookies.