முதல் கணவரை அழைத்து வந்தது 2-வது கணவருக்கு பிடிக்கவில்லை.. மனம் திறந்த பிரபல நடிகை..!

குட்டி பத்மினி (Kutty Padmini) தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகையாவார். தமிழகத் திரைப்படத்துறையில் பிரதானமாக பணி புரிந்து வருகிறார். 1959இல் “ஆம்பள அஞ்சுலம்” எனறப் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனது மூன்றாவது வயதில் தமிழகத் திரைப்படத்துறையில் அறிமுகமானார். சிவாஜி கணேசன், ம.கோ.இராமச்சந்திரன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரசினிகாந்த், கமல்ஹாசன் உட்பட தமிழ் திரையுலகின் பல முக்கிய நபர்களுடன் நடித்துள்ளார். குழந்தையும் தெய்வமும் திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை கலைஞருக்கான தேசிய திரைப்பட விருதை வென்ற முதல் பெண் குழந்தை நட்சத்திரக் கலைஞராவார். களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்ததற்காக கமல்ஹாசன் முதல் முறையாக இவ்விருதினை பெற்றுள்ளார்.

குட்டி பத்மினி, பெண்மணி அவள் கண்மணி, அவள் அப்படித்தான், அவர்கள், சகலகலா சம்மந்தி போன்றத் திரைப்படங்களில் துணை நடிகையாகத் தன்னை வளர்த்துக் கொண்டார். இவரது வைஷ்ணவி ஃபிலிம்ஸ் எண்டெர்பிரசைஸ் லிமிடெட் என்ற தொலைக்காட்சி நிறுவனம் மூலம், “கிருஷ்ணதாசி”, மற்றும் “இராமானுஜர்” போன்ற பல சிறந்த படைப்புகளை தயாரித்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினராகவும் இருக்கிறார்.

தற்போது, சேனல் ஒன்றுக்கு குட்டி பத்மினி அளித்த பேட்டியில் பல தகவல்களை மனம் திறந்து பகிர்ந்துள்ளார். இவர் தனது முதல் கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்து இருந்தார். அதுவும், நிலையாக இல்லை, சில காரணங்களால் பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்

இந்நிலையில், இவர் அளித்த பேட்டியில், “தனது முதல் கணவர் குடிபோதைக்கு அடிமை ஆகி, உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், யார் யாருக்கோ உதவுகிறோம், தன்னுடைய முதல் கணவர் நோய் பாதிப்பில் இருக்கும் போது, அவரை எப்படி கவனிக்காமல் இருக்க முடியும்? என்றும், என்ன தான் இருந்தாலும் அவர் தன் முதல் கணவர் எனவும், அவரோடு தான் வாழ்ந்திருக்கிறேன் என்றும், தன் குழந்தைக்கு அவர் அப்பா எனவும், பிரிவு ஒருவரால் வருவதில்லை, இருவரால் வருவது என்கிற பக்குவம் தனக்கு வந்தது என தெரிவித்தார்.

தன் மகள் அமெரிக்காவில் இருந்து போன் செய்தாள் என்றும், ‘அப்பாவிற்கு அடிபட்டு இருக்கார் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்’ என்று கூறியதாகவும், அப்போது அவரை மருத்துவமனையில் சேர்த்தேன் என்றும், அவரை வீட்டில் தங்க வைத்து தன் அலுவலகத்தில் வேலை போட்டு குடுத்தேன் எனவும், செலவுக்கு வேண்டுமே என்பதற்காக மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் கொடுத்ததாகவும், அட்மின் வேலை பார்க்கச் கூறியதாகவும், தினமும் வருவார், தனி கேபின் கொடுத்து இருப்பதாகவும், ஒரு நாய் குட்டிக்கு ரூ.10 ஆயிரம் மாசம் செலவு பண்றோம். ஒரு மனுசனுக்கு செலவு பண்ணக் கூடாதா? என தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், தன்னுடைய இரண்டாவது கணவர் ஒரு நாள் போன் செய்து ‘உன் முதல் கணவர் வந்துட்டார் போல, சந்தோசமா’ என்று கேட்டதாகவும், ‘ஆமாம், உங்களுக்கு அதில் என்ன வயிற்று எரிச்சல்?’ என்று பதிலடி தந்ததாகவும், உடனே அருகில் இருந்த தன் மகள், ‘எப்படி என் அம்மாவிடம் இப்படி கேட்கலாம்’ என, அவருடன் சண்டை போட்தாக அவரது வாழ்க்கை பற்றி வெளிப்படையாக குட்டி பத்மினி பேசியுள்ளார்.

Poorni

Recent Posts

அதிமுக பாஜக கூட்டணி… எனக்கு ஒரு டவுட்டு : பரபரப்பு புகார் கூறிய கனிமொழி எம்பி!

தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…

9 hours ago

சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?

சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…

10 hours ago

Toxic மக்களே, நீங்க எப்படித்தான் வாழ்கிறீர்கள்? வைரலாகும் திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி…

பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…

11 hours ago

அண்ணாமலை மாற்றம் என அமித்ஷா பதிவிட்ட மறுநொடி.. காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…

12 hours ago

ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?

இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…

12 hours ago

பொன்முடியின் கொச்சை பேச்சு.. ‘நாக்கு தவறி’ பேசியிருக்கலாம் : அமைச்சர் ரகுபதி ஆதரவு!

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…

13 hours ago

This website uses cookies.