தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான படம் கனெக்ட். இவர் தற்போது, அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஜோடியாக ஜவான், மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ஒரு திரைப்படம், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ஒரு திரைப்படம் என அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார்.
ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இந்நிலையில், இப்படி பிரபலமாக வலம் வரும் நயன்தாரா அவர்களை, மாளவிகா மோஹனன் பேட்டிகளில் மறைமுகமாக பேசி வருகிறார். பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற தமிழ் படங்களில் நடித்த இவருக்கு தற்போது தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் மற்ற மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாளவிகா மோகனிடம், ”தமிழ் சினிமாவில் வேடிக்கையான லாஜிக் பற்றி சொல்லுங்கள்” என்று கேள்வி கேட்ட போது பதிலளித்த மாளவிகா மோகனன், “நான் உண்மையில் பெரிய சூப்பர் ஸ்டார் நடிகையைப் அப்படி பார்த்திருக்கிறேன். ஒரு மருத்துவமனை காட்சியில், முழு மேக்கப்பில் கண் லைனர், அழகான முடி, என்று இருப்பார்” என்று கூறி இருந்தார்.
இதற்கு ஒரு பேட்டியில் பதில் அளித்த நயன்தாரா, ‘ஹாஸ்பிடல் சீன் என்பதால் அதுக்காக முடியை விரிச்சு போட்டுட்டா உட்கார்ந்து இருக்க முடியும். ரியலிஸ்டிக் படங்களுக்கும் கமர்சியல் படங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அவர்களுக்கு தேவையான விதத்தில் தான் நடிக்க சொல்வார்கள். அது போல தான் நடித்தேன்’ என்று கூறினார்.
இந்நிலையில், மீண்டும் பேட்டி ஒன்றில் மாளவிகா, லேடி சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் குறித்து பேசி இருக்கிறார். அதன்படி ஹீரோயின்களை லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுவதில் தனக்கு சுத்தமாக விருப்பம் இல்லை என தெரிவித்துள்ள அவர், ஹீரோக்களை எப்படி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கிறோமோ, அதேபோல் ஹீரோயின்களையும் சூப்பர்ஸ்டார் என்றே அழைக்க வேண்டும். கத்ரீனா கைஃப், ஆலியா பட், தீபிகா படுகோன் போன்றவர்களை லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைப்பதில்லை. அவர்கள் எல்லாம் சூப்பர்ஸ்டார் தான் என்று பேசி உள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் நயன்தாரா மீதுள்ள பொறாமையில் தான் மாளவிகா இப்படி பேசி உள்ளதாக விமர்சித்து வருகின்றனர். இதுவரை சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுவது நயன்தாரா மற்றும் மஞ்சு வாரியர் தான். ஆனால் அவர்களது பெயரை குறிப்பிடாமல் பாலிவுட் நடிகைகளின் பெயரைச் சொல்லி மாளவிகா மோகனன் பேசியது குறிப்பிடத்தக்கது.
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…
This website uses cookies.