90களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மீனா. தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி ராஜ்ஜியத்தை தனது கண்களால் உருவாக்கியவர்.
தமிழ் படங்களைத் தாண்டி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்த இவர், தமிழில் அத்தனை முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு டாப் நடிகையாக வலம் வந்தார்.
இதனிடையே, கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்த நடிகை மீனாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது, மீனா போல சாயல் கொண்ட குழந்தை நைனிகா, தெறி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்ற படங்களல் குழந்தை நட்சத்திரமா நடித்தார்.
இந்த நிலையில் கடந்த வருடம் மீனாவின் கணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து தனிமையில் மீனா தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
இதனிடையே, தனியார் தொலைக்காட்சி ஒன்று நடிகை மீனாவுக்கு 40வது பிறந்தநாளையொட்டி விழா எடுத்த நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் உட்பட தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், நடிகை மீனா குறித்து, வெளியான பல்வேறு கிசுகிசுகளுக்கு அவர் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அதாவது, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை மீனா தன் கணவரை நினைத்து கண் கலங்கினார்.மேலும் 2-ம் திருமணம் குறித்து பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அப்போது பேசிய நடிகை மீனா, தன் கணவர் இல்லை என்பதையே தன்னால் இன்னும் நம்ப முடியவில்லை என்றும், அதற்குள் இந்த விஷயங்கள் எல்லாம் எப்படி பரவுகிறது என்றே தனக்கு தெரியவில்லை எனவும், தற்போது தன் மகளின் எதிர்காலம் பற்றியும், தன் படங்களை தேர்வு செய்வதில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தி வருவதாக மிகவும் உருக்கமாக நடிகை மீனா தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.