கணவர் இறந்ததிலிருந்து நடிகை மீனா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். குறிப்பாக இரண்டாம் திருமணம் குறித்து பல நடிகர்களுடன் சேர்த்து வைத்து பேசப்பட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது பிரபல அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவருடன் நடிகை மீனா தகாத உறவு வைத்திருப்பதாக செய்திகள் இஷ்டத்துக்கும் வெளிவந்து கொண்டிருக்கிறது .
ஆம், பாஜகாவை சேர்ந்த மத்திய அமைச்சர் எல் முருகன் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி பொங்கலை துவங்கி வைக்க இவ்விழாவில் பல தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த விழாவில் நடிகை மீனாவும் தமிழ் சினிமாவின் நடன மாஸ்டரும் ஆன கலாவும் கலந்து கொண்டனர்.
பொங்கல் விழாவை பிரதமர் மோடி துவக்கி வைத்த போது அவருக்கு அருகே இருந்த மீனாவுக்கு எல் முருகன் முக்கியத்துவம் தந்திருந்தார். இதுதான் தற்போது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாகியுள்ளது. காரணம் தமிழகத்தை சேர்ந்த பாஜக உறுப்பினரும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான நடிகை குஷ்புவை இந்த நிகழ்ச்சியில் பார்க்க முடியவில்லை.
குஷ்பூவை தவிர்த்து பாஜக உறுப்பினர் அல்லாத நடிகையான மீனாவை எல் முருகன் அழைத்திருப்பதில் பல உள்நோக்கங்கள் புதைந்து கிடப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கான காரணம் நடிகை மீனாவை பாஜகவில் சேர்க்கும் முயற்சியில் முருகன் இருக்கிறாரா? அல்லது முருகனுடன் நடிகை மீனா தகாத உறவில் இருக்கிறாரா? என்பது பற்றிய பேச்சுக்கள் தான் தற்போது விவாத பொருளாக மாறி இருக்கிறது.
இது குறித்து பேசி உள்ள பிரபல விமர்சகர் ஆன தமிழா தமிழா பாண்டியன், மீனா அந்த விழாவிற்கு செல்வதற்கான காரணம் என்ன? மீனா அந்த விழாவிற்கு ஏன் வர வைக்கப்பட்டார்? நிச்சயம் அவரின் வருகை சாதாரண காரியமாக இருக்காது. அவருக்கு சொகுசு விமானம் தயார் செய்திருப்பார்கள். சொகுசு ஹோட்டல்களில் தான் அவரை தங்க வைத்திருப்பார்கள். இவ்வளவு செலவுகள் செய்து நடிகை மீனாவை ஏன் அந்த விழாவில் கலந்து கொள்ள வைக்க வேண்டும்?
அதற்கு பதிலாக ஆதரவற்றவர்களுக்கு உணவளித்திருக்கலாம். பல உதவிகள் செய்திருக்கலாம். இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என தமிழா தமிழா பாண்டியன் கூறி எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி இருக்கிறார் . மேலும் பேசிய அவர், முன்னதாக நடிகை மீனா சித்தி வீட்டு வேலைகளை பார்த்து வந்த ஒரு நபராக இருந்தார்.
மீனா தற்கொலை முயற்சி:
ஆம், ஒரு அரசியல்வாதியிடம் வீட்டு வேலைகளை தான் பார்த்து வந்தார். அவருடன் வளர்ந்து வந்த மீனா சிறுவயசு முதலே சினிமாவில் ஆர்வம் காட்டி வந்தார். சினிமாவில் பிரபலம் ஆவதற்கு முன்னரே ஒரு நபரை. தீவிரமாக காதலித்து வந்த மீனா சினிமாவில் வாய்ப்பு கிடைக்க புகழின் உச்சத்தை அடைந்தார். அதனால் மீனாவின் காதல் முறிந்து விட்டது.
அந்த சமயத்தில் நடிகை மீனா தற்கொலை முயற்சி செய்திருக்கிறார். இரண்டு முறை திருமணம் செய்து கொள்ளலாம் என முயற்சித்த நடிகை மீனாவுக்கு காதல் முறிவு ஏற்றுக் கொள்ள முடியாமல் போனதால் தற்கொலை முயற்சி எடுத்ததாக தமிழா தமிழா பாண்டியன் அந்த பேட்டியில் கூறி சர்ச்சைகளை கிளப்பியிருக்கிறார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.