தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது கேரியரை தொடங்கியவர் நடிகை மீனா. ரஜினி, கமல், அஜித், அர்ஜுன் என முன்னணி நடிகர்களின் ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்து 80ஸ் மற்றும் 90ஸ் களில் கனவு கன்னியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் பிரபல நடிகையாக இருந்து வந்த இவர், 2009ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். தெறி படத்தில் விஜய் மகளாக நடித்து நைனிகா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
கடந்த ஆண்டு மீனாவின் கணவர் உடல்நிலை குறைவால் காலமானார். கணவரின் மறைவால் துக்கத்தில் இருந்த மீனா, அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார். சமீபத்தில், மீனா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். மேலும், தனது தோழிகளுடன் நேரத்தை செலவிட்டு வரும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், சினிமா படப்பிடிப்புகளிலும் மீனா கலந்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும், படப்பிடிப்பில் இருப்பதாக மேக்கப் போட்டுகொண்டு இருக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் மீனா பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் கணவரின் இறப்பிற்கு பின்னர் மீனா முதன் முறையாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளார்.
இந்தநிலையில், இந்திய திரையுலகில் கே.விஸ்வநாத் முக்கியமான ஒரு இயக்குனராக விளங்கியவர். இவர் ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் பல படங்களை கே.விஸ்வநாத் இயக்கி வெற்றி அடைய செய்திருக்கிறார். இது தவிர தமிழ் சினிமாவில் யாரடி நீ மோகினி, ராஜபாட்டை, சிங்கம் 2, உத்தம வில்லன், லிங்கா போன்ற பல படங்களில் நடித்தும் அசத்தியுள்ளார்.
திரைத்துறையில் பல சாதனைகளை செய்த கே.விஸ்வநாத்துக்கு இந்திய அரசு 5 முறை தேசிய விருது வழங்கியுள்ளது. இப்படி சினிமாவில் மாபெரும் வெற்றியை கொடுத்த கே.விஸ்வநாத் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் திரையுலகம் மட்டுமில்லாது அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல நடிகையான மீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது சிறுவயதில் கே.விஸ்வநாதனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வீடியோவாக பதிவிட்டு, ” உங்களுடன் பணியாற்றியது என் வாழ்வில் கிடைத்த அதிர்ஷ்டம் என்றும், மேலும் உங்களின் பொறுமை அன்பு, கலைத்துறை மீது உங்களின் ஆர்வம் என்றென்றும் மறக்க முடியாத ஒன்று” என பதிவிட்டு தனது வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.