இயக்குனர் கே ஆர் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஈரமான ரோஜாவே மிகப் பெரிய ஹிட்டான இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் மோகினி. முதல் படமே பெரிய ஹிட் கொடுத்தது என்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் இவருக்கு குவிந்தன.
மேலும், ராசியான நடிகையாகவும் மோகினி பார்க்கப்பட்டார். அவற்றில் புதிய மன்னர்கள், நாடோடி, பாட்டுக்காரன் போன்ற ஹிட் படங்களும் அடங்கும். மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு கன்னடம் பிறமொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். குறிப்பாக, ஹிந்தியில் நடிகர் அக்ஷய் குமார் படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார்.
மேலும் படிக்க: தம்பி ஓடாத நில்லு.. மகன்களுடன் கொஞ்சி விளையாடிய நயன்..!(Video)
இந்நிலையில், 1999 ல் மோகினி பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். பின்னர், தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள மோகினி தான் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய கதையை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது, எதற்காக வாழ வேண்டும் என்ற எண்ணம் வர கொஞ்சம் கொஞ்சமாக மன அழுத்தத்திற்குள் சென்று விட்டதாகவும், கெட்ட கெட்ட கனவுகளும் அந்த சமயத்தில் ஆரம்பித்ததாகவும் பேய் பிசாசு கனவுகள் அடிக்கடி வந்ததாக கூறி அதன் காரணமாக தூக்கமும் போய்விட்டது. அப்போது, ஒரு ஜோசியரை சந்தித்தபோது அவர் தனக்கு செய்வினை வைத்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: யாரையும் நம்பிறாதீங்க.. மருத்துவமனையில் இருந்து திடீர் வீடியோ வெளியிட்ட மதுரை முத்து மனைவி..!
இதனால் தான் இன்னும் அதிகப்படியான மன அழுத்தத்தில் இருந்தேன். தற்கொலை செய்து மரணம் அடைய வேண்டும் என்பதற்காக மோகினிக்கு சூனியம் வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் சொன்னது போலவே தனக்கு தற்கொலை எண்ணம் அதிகமாக வந்தது என்று தெரிவித்தார். மேலும், அதன் பிறகு ஒரு சிவாச்சாரியார் அவரை சந்தித்து செய்வினை போன்ற விஷயங்கள் உண்மையா என்று கேள்வி எழுப்பிய போது நல்லது இருக்கிறது என்றால் கெட்டதும் கண்டிப்பாக உள்ளது என அவர் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
மேலும், அப்போது கடவுள் யார் என்று தேட ஆரம்பித்த நிலையில், கனவில் இயேசு வந்தார் அவர் வந்த நாளிலிருந்து நான் விடுதலை கிடைத்ததாக கூறி மன நிம்மதி அடைய துவங்கியதாகவும் கூறினார். மேலும், பேட்டியில் ஒரு முறை கையில் அறுத்துக் கொண்டேன் கை முழுக்க இரத்த கீறல்கள் ஏற்பட்டது மற்றும் எலி மருந்தை கேக்கில் கலந்து குடித்தேன் என்றும், மோகினி கிட்டத்தட்ட 136 தூக்க மாத்திரைகளை அப்படியே சாப்பிட்டு உள்ளேன் என்று பேசி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.