தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான படம் கனெக்ட். இவர் தற்போது, அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஜோடியாக ஜவான், மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ஒரு திரைப்படம், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ஒரு திரைப்படம் என அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார்.
ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இந்நிலையில், சென்னை சத்யபாமா கல்லூரியில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நயன்தாரா, மாணவ – மாணவியருக்கு சிறப்பு உரை வழங்கினார். அப்போது நயன்தாரா கூறியதாவது, “கல்லூரி வாழ்க்கை என்பது மிக முக்கியமான ஒன்று, மகிழ்ச்சி நிறைந்தது.
இந்த காலகட்டத்தில் நீங்கள் யாருடன் இருக்கிறீர்கள், யாருடன் பழகுகிறீர்கள் என்பது மிக முக்கியமானது. இந்த கல்லூரி நாட்களில் நல்ல நண்பர்களை தேர்வு செய்து பழக வேண்டும். இந்த சமயத்தில் நீங்கள் எடுக்க கூடிய முடிவுகள் அனைத்தும் உங்கள் எதிர்காலத்திற்கானது என்பதை மறந்துவிடாதீர்கள். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு நீங்கள் வெளியே செல்லும் போது, சிறந்த நபராக வெற்றியடைந்த, திறமையானவராக இருக்க வேண்டும்.
எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், பணிவாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். மற்றவர்களிடம் நீங்கள் பணிவாக நடந்து கொள்ளும் போது, உங்கள் வாழ்க்கை இன்னும் அழகாக இருக்கும். கல்லூரியில் நண்பர்களோடு ஜாலியாக இருக்கலாம், ஆனால், உங்கள் பெற்றோருக்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தினமும் நீங்கள் அவர்களுக்காக ஒரு 10 நிமிடத்தை செல்வழிக்க வேண்டும், அதில் தான் அவர்களின் மகிழ்ச்சியே இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று பேசினார்.
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
This website uses cookies.