எனக்கு இரண்டு கணவர்… பகீர் கிளப்பிய பிரபல நடிகை – அவர் பாவம் விட்டுவிடுங்கள்!

பிரபல சீரியல் நடிகையான நீலிமா ராணி தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமாகி அதன் பின்னர் சீரியல், திரைப்படம் என பிசியாக நடித்து வருகிறார். இவர்1992ம் ஆண்டு நடிகர் கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதற்கு பிறகு பல திரைப்படங்களில் முகமறியப்பட்ட ரோல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகையானார். இதுவரை 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 50க்கும் மேற்பட்ட சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இவர் கரத்தில் நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றார்.

அதன் பின்னர் நிறைய திரைப்பட வாய்ப்புகள் அவரை தேடி வர ” அமளி துமளி, இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும்” போன்ற திரைப்படங்களில் நடித்தார். இதனிடையே தன்னை விட மூத்த வயதினரான இசைவாணன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளது. நீலிமா ராணி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கணவரை ரசிகர்கள் கிண்டல் செய்வது குறித்து கூறி மனம் வருந்தினார்.

இந்நிலையில் தற்போது அவரின் சமீபத்திய பேட்டி ஒன்றில் நெட்டிசன்ஸ் கூகுளில் தன்னை பற்றி அதிகம் தேடப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ” நீலிமாவின் முதல் கணவர் யார்? என தேடலுக்கு பதில் அளித்த அவர், எனக்கு ஒரே கணவன் இசைவானன் தான். என்னுடைய முதல் கணவரும் அவர் தான் இரண்டாம் கணவரும் அவர் தான் என்று முகம் சுளிக்காமல் வருந்தாமல் செம கூலாக பதில் அளித்தார். இதையடுத்து நெட்டிசன்ஸ் சிலர், பாவம் அந்த மனுஷன் பார்க்க நல்லவரா இருக்காரு… அவரை ஏன் சும்மா கிண்டல் பண்ணிட்டே இருக்காங்க? என நீலிமாவுக்கு ஆறுதலாக கமெண்ட்ஸ் செய்துள்ளனர். .

Ramya Shree

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

8 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

8 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

10 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

10 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

11 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

11 hours ago

This website uses cookies.