1992 ஆம் ஆண்டு தேவர் மகன் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை நீலிமா ராணி. தொடர்ந்து திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், சின்னத்திரையில் நல்ல வரவேற்பை பெற்றார்.
தமிழில் நான் மகான் அல்ல, மொழி, குற்றம் 23 போன்ற சில படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். வில்லி கதாபாத்திரங்களில் தனது expression மற்றும் லுக் மூலம் ரசிகர்களிடையே நல்ல பிரபலம் அடைந்தார். சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது போட்டோஷூட் புகைப்படங்களை போஸ்ட் செய்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ஆகஸ்ட் 16 1947 திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்கு இயக்குனர் என்.எஸ் பொன்குமார் அழைத்தப்போது படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. படம் வெளியான பிறகு உங்கள் கதாபாத்திரம்தான் மக்களால் அதிகமாக பேசப்படும் என கூறியுள்ளார்.
இதை கேட்ட நீலிமா, எவ்ளோ நாள் சார் கால்ஷூட் வேணும் என கேட்க, அரை நாள் போதும் என கூறியுள்ளார் இயக்குனர். அரைநாளை வைத்து என்ன எடுப்பார் என யோசனையுடன் படத்தில் நடித்து கொடுத்துள்ளார் நீலிமா ராணி. இந்த திரைப்படத்தில் கெளதம் கார்த்திக்கு அம்மாவாக நடித்துள்ளார்.
படம் முழுக்க கெளதம் கார்த்தி தனது அம்மாவை குறித்து பேசி கொண்டிருப்பதால் 5 நிமிடம் வந்தாலும் அந்த அம்மா கதாபாத்திரம் மக்கள் மத்தியில் வலுவாக பேசப்பட்டு வருகிறது. இயக்குனர் சொன்னது போல் படம் பார்த்தவர்கள் நீலிமாவின் கதாபாத்திரத்தை புகழ்ந்து பேசி வருகின்றனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.