மலையாள குடும்பத்தில் பிறந்த நடிகை நித்யா மேனன் திரைத்துறையில் நடிப்பதற்கு விரும்பியது கிடையாது பத்திரிக்கையாளராக தான் இருக்க விரும்பியதாக ஒரு தொலைகாட்சி பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் பிறகு பத்திரிக்கை துறையில் இருந்த விருப்பம் குறைந்ததினால் புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளர் படிப்பை படித்து முடித்தார்.
அதன் பின்னர் படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிகளில் நடித்தார். இவர் பின்னணி படகியாகவும் சிறந்த நடிகையாகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழில் சித்தார்த் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான 180 படத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.
அதைத்தொடர்ந்து வெப்பம், உருமி, மாலினி 22 பாளையங்கோட்டை, ஓ காதல் கண்மணி, மெர்சல், காஞ்சனா 2, இருமுகன், சைக்கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்து மிகச்சிறந்த நடிகையாக மார்க்கெட் பிடித்தார். இந்நிலையில் தற்போது 35 வயதாகும் நித்யா மேனன் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்துள்ளாராம்.
அதன்படி தனது சிறுவயது நெருங்கிய நண்பர் ஒருவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்யவுள்ளாராம். அந்த நபர் மலையாள மொழிப்படங்களில் கூட நடித்துள்ளாராம். விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாக இருந்தால் இதுகுறித்து நித்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம்.
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
This website uses cookies.