மலையாள குடும்பத்தில் பிறந்த நடிகை நித்யா மேனன் திரைத்துறையில் நடிப்பதற்கு விரும்பியது கிடையாது பத்திரிக்கையாளராக தான் இருக்க விரும்பியதாக ஒரு தொலைகாட்சி பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் பிறகு பத்திரிக்கை துறையில் இருந்த விருப்பம் குறைந்ததினால் புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளர் படிப்பை படித்து முடித்தார்.
அதன் பின்னர் படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிகளில் நடித்தார். இவர் பின்னணி படகியாகவும் சிறந்த நடிகையாகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழில் சித்தார்த் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான 180 படத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.
அதைத்தொடர்ந்து வெப்பம், உருமி, மாலினி 22 பாளையங்கோட்டை, ஓ காதல் கண்மணி, மெர்சல், காஞ்சனா 2, இருமுகன், சைக்கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்து மிகச்சிறந்த நடிகையாக மார்க்கெட் பிடித்தார். இந்நிலையில் தற்போது 35 வயதாகும் நித்யா மேனன் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்துள்ளாராம்.
அதன்படி தனது சிறுவயது நெருங்கிய நண்பர் ஒருவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்யவுள்ளாராம். அந்த நபர் மலையாள மொழிப்படங்களில் கூட நடித்துள்ளாராம். விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாக இருந்தால் இதுகுறித்து நித்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம்.
சென்னையில், இன்று (பிப்.25) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 75 ரூபாய்க்கு…
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் அறிவித்துள்ளது கட்சியினுள் பேசுபொருளாகியுள்ளது. ராணிப்பேட்டை: நாம் தமிழர்…
ஏப்ரலில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லி படம் மீது அஜித்குமார் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். சென்னை: மைத்ரி…
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
This website uses cookies.