ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான ‘பொய் சொல்ல போறோம் படம்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பியா பாஜ்பாய். இந்த படத்தை தொடர்ந்து ‘கோவா’, ‘கோ’, ‘அபியும் அனுவும்’ போன்ற சில தமிழ் படங்களில் பியா நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் தெரிந்த முக நடிகையாக மாறினார்.
சமீபத்தில் நடிகை பியா பேட்டி ஒன்று கொடுத்தார். அந்தப் பேட்டியில் கடந்த கால வாழ்க்கை குறித்து கண்கலங்கி பகிர்ந்தார். அவர் பேசியதாவது, நான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் உள்ளேன். சினிமாவுக்காக நான் வீட்டை விட்டு மும்பை வந்தேன். அப்போது எனக்கு வயது 15 இருக்கும். மும்பைக்கு வந்தபோது எனக்கு தங்க இடமெல்லாம் கிடைக்கவில்லை. இதனால் என்ன செய்யலாம் என்று குழம்பிக் கொண்டிருந்தேன்.
அப்போது, அந்தேரியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் ஒருவர் என்னிடம், நான் நாய் ஒன்றை வளர்க்கிறேன். அந்த நாய் இருக்கும் இடம் மிகச் சிறிய அறைதான். உங்களால் அங்கு தங்கிக்கொள்ள முடியுமா… கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியுமா என்று என்னிடம் கேட்டார். எனக்கு வேறு வழியில்லை. அதனால், நான் அந்த நாயுடன் 9 மாதங்களுக்கும் மேலாக அங்கேயே தங்கினேன் என்று கூறும்போதே கண்கலங்கினார். இப்போது அந்த அறையை விட என் கழிப்பறை கூட பெரியதாகிவிட்டது. ஆனால் எல்லாப் போராட்டத்துக்குப் பிறகும் நிச்சயம் நல்லது நடக்கும் என்றார்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.