முனி படத்தின் வெற்றியை தொடர்ந்து 2011ம் ஆண்டு லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சரத்குமார், லட்சுமி ராய், கோவை சரளா, தேவதர்ஷினி என பல திரை பிரபலங்கள் நடித்திருந்தனர்.
காஞ்சனா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் திருநங்கை பிரியா நடித்திருப்பார். இந்த நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியா பல விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்து உள்ளார்.
அதாவது அவர் காஞ்சனா படத்தில் நடித்து மிகப்பெரிய தவறு செய்து விட்டதாகவும், அந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு தன்னுடைய வாழ்க்கை சாதாரணமாக போய்க்கொண்டு இருந்ததாகவும், ஆனால் காஞ்சனா படத்தின் பின் பலரும் தான் கோடியில் சம்பாதித்து விட்டேன் என நினைத்து வருவதாகவும், அந்த படத்திற்குப் பின் தனக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவே இல்லை என்று வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் லாரன்ஸ் இந்த படத்தின் மூலம் உங்களது வாழ்க்கையில் பல மாற்றங்கள் உருவாகும் என்று கூறியதாகவும், ஆனால் ஒரு மாற்றமும் தற்போது வரை நடக்கவில்லை என்று திருநங்கை பிரியா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
This website uses cookies.