‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ரம்பா. இதன்பின் ‘செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார்.
நடிகை ரம்பாவிற்கு கடந்த 2010ஆம் ஆண்டு இந்திர குமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
இதனிடையே, தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிய முடிவெடுத்த ரம்பா, விவாகரத்து கோரி இருந்தார். அந்த வழக்கில், தன்னுடைய கணவருக்கு தொழிற்சாலை உள்ளது. மாதம் 25 லட்சம் ரூபாய் சம்பாதி வருகிறார். தன் மூத்த மகளின் கல்வி, இளைய மகளின் மருத்துவ செலவுகளுக்கும், பராமரிப்புக்கும் பணம் தேவை.
தனக்கும் சினிமா வாய்ப்பு இல்லை என்றும், எனவே தங்களின் பாராமரிப்புக்கு மாதம் ரூ.2.5 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டார். அந்த மனு விசாரணைக்கு வந்த போது, அப்போது, இருவரும் சமரசம் செய்யுமாறு நீதிபதி சில அறிவுரைகளை வழங்கினார். அதை ஏற்றுக் கொண்டு இருவரும், அதன் பின் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். அதன் பின்னர் கணவருடன் இணைந்த ரம்பாவிற்கு, மூன்றாவது குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் தனுஷ். நடிகராக மட்டுமல்லாமல், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர்.…
யாருடைய கையிலும், காலிலும் விலங்கு போட்டு நிறுத்துவது இயக்கம் அல்ல என நாதகவில் இருந்து நிர்வாகிகள் விலகுவது குறித்து சீமான்…
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்ட்ர் ஹர்திக் பாண்டியா அடிக்கடி பேசு பொருளாக உலா வருகிறார். தனது மனைவியை விவாகரத்து செய்வதாக…
தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், தமிழகத்தில் 31 தொகுதிகள்தான் இருக்கும். 8 தொகுதிகளை இழக்க வேண்டியச் சூழல் ஏற்படும் என முதலமைச்சர்…
கணவரை இழந்த நடிகைகளை குறி வைத்து அவர்களுடன் சில பல நாட்கள் பழகி கழட்டி விடுவதே இந்த பிரபல நடிகரின்…
This website uses cookies.