பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது வெளிநாட்டு நடிகை ஒருவர் பாலியல் புகார் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை மெஹ்ரீன் ஷா. இவர் இஸ்லமாபாத்தில் நடந்த ஒரு படப்பின் போது இந்திய சினிமா தயாரிப்பாளர் ராஜ் குப்தா மற்றும் பாகிஸ்தான் டைரக்டர் சையத் எஹ்சான் அலி ஜைதி ஆகியோர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:- நான் அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் ராஜ் குப்தாவும், இஷான் அலியுடன் படப்பிடிப்பு தொடர்பாக சென்றிருந்தேன். அங்கு வந்தவுடன் இருவரின் நடத்தையும் முற்றிலும் மாறியது. ராஜ் குப்தாவும், இஷான் அலியுடன் பணிபுரிவது எனக்கு ஒரு கனவாக இருந்தது. அவர்கள் இங்கு வேலை செய்ய வந்தார்களா அல்லது அவர்களுக்கு வேறு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்பது கூட எனக்குத் தெரியாது.
இருவரும் மோசமான கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்கு இணங்க மறுத்ததால் தான் துன்புறுத்தப்பட்டேன். பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதுதான் இதையெல்லாம் சொல்வதன் நோக்கம். மற்ற நடிகர்களை எச்சரிக்க விரும்பியதால் இப்போது இந்த வீடியோவை வெளியிட்டுள்ளேன். தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் கோரிக்கையை ஏற்காததால் தண்டனையாக பட்டினி கிடக்க வேண்டியதாக இருந்தது, எனக் கூறினார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.