பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது வெளிநாட்டு நடிகை ஒருவர் பாலியல் புகார் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை மெஹ்ரீன் ஷா. இவர் இஸ்லமாபாத்தில் நடந்த ஒரு படப்பின் போது இந்திய சினிமா தயாரிப்பாளர் ராஜ் குப்தா மற்றும் பாகிஸ்தான் டைரக்டர் சையத் எஹ்சான் அலி ஜைதி ஆகியோர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:- நான் அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் ராஜ் குப்தாவும், இஷான் அலியுடன் படப்பிடிப்பு தொடர்பாக சென்றிருந்தேன். அங்கு வந்தவுடன் இருவரின் நடத்தையும் முற்றிலும் மாறியது. ராஜ் குப்தாவும், இஷான் அலியுடன் பணிபுரிவது எனக்கு ஒரு கனவாக இருந்தது. அவர்கள் இங்கு வேலை செய்ய வந்தார்களா அல்லது அவர்களுக்கு வேறு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்பது கூட எனக்குத் தெரியாது.
இருவரும் மோசமான கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்கு இணங்க மறுத்ததால் தான் துன்புறுத்தப்பட்டேன். பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதுதான் இதையெல்லாம் சொல்வதன் நோக்கம். மற்ற நடிகர்களை எச்சரிக்க விரும்பியதால் இப்போது இந்த வீடியோவை வெளியிட்டுள்ளேன். தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் கோரிக்கையை ஏற்காததால் தண்டனையாக பட்டினி கிடக்க வேண்டியதாக இருந்தது, எனக் கூறினார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.